முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொரியா ஓபன் பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து

சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

சியோல் : கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

காலிறுதி...

கொரியா ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21–19, 16–21, 21–10 என்ற செட் கணக்கில் 63 நிமிடங்கள் போராடி ஜப்பானின் மினட்சு மிதானியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி...

நேற்று நடைபெற்ற அரைஇறுதியில் சிந்து, ஹி பிங்ஜியாவை (சீனா) எதிர்கொண்டார்.  முதல் செட்டில் பி.வி.சிந்து 21 -10 என எளிதாக வென்றார். 2வது செட்டில் சீன வீராங்கனை பிங் ஜியா 21 -17 என்ற செட் கணக்கில் வென்றார்.  இதையடுத்து, வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது செட்டில் 21-16 என கைப்பற்றி 2-1 என வெற்றி பெற்று இறுதி போட்டிற்குள் நுழைந்தார். இறுதிபோட்டியில்  சிந்து ஜப்பானின் நயோமியை எதிர் கொள்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து