முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியா எல்லையில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஈராக் ராணுவம் தேடுதல் வேட்டை

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

டாமாஸ்கஸ் : சிரியா எல்லையில் ஐ.எஸ் அமைப்புக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈராக் பாதுகாப்புப் படையினர் இறங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஈராக் ராணுவத்தினர் தரப்பில் கூறியபோது, "சிரியா எல்லையில் அமைந்துள்ள பாலைவன பகுதிகளில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளோம். ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக ஒவ்வொரு பகுதியாக நாங்கள் முன்னேறி வந்து கொண்டிருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.

ஈராக்க்கில் ஐ.எஸ் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பாலான பகுதிகளை அமெரிக்கா உதவியுடன் ஈராக் கைப்பற்றிவிட்டது, எனினும் சிரியா -ஈராக் எல்லையோரப் பகுதிகளில் அமைந்துள்ள அனா, ராவா ஆகிய பகுதிகள் இன்னும் ஐ.ஏஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து