முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், அ.தி.மு.க நிர்வாகிகள் மாலை அணிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தந்தை பெரியாரின் 139 வது பிறந்தநாளையொட்டி சென்னையில் அவரது சிலைக்கு அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைச்சர்கள், நிர்வாகிகள் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்,

தந்தை பெரியாரின் 139-ஆவது பிறந்த நாளான நேற்று காலை, சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள பெரியாரின் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அ.தி.மு.க சார்பாக, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், அ.தி.மு.க பொருளாளரும், துணை முதல்வருமான  .ஓ. பன்னீர்செல்வம், அதிமுக அவைத் தலைவர். மதுசூதனன், மீனளத் துறை அமைச்சர். ஜெயக்குமார், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி,  தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக மாணவர் அணிச் செயலாளர் எஸ்.ஆர் .விஜயகுமார், எம்.பி. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர். ஜெயவர்தன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர்களான . ராஜகண்ணப்பன்,  மாதவரம் ஏ. மூர்த்தி, முக்கூர். சுப்ரமணியன்,, டி,கே.எம். சின்னையா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ்பாண்டியன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள பெரியார் சிலைக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர், சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன், திராவிடர்கழகத்தலைவர் கீ.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் சி.மகேந்திரன், உள்ளிட்டோர் மாலையணிவித்தனர், தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், இளைஞர் அணிசெயலாளர் பார்த்தசாரதி ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட பெரியார் படத்திற்கு மாலையணிவித்தனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து