முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி: இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஐ. நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றடைந்தார்.

ஐ. நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க நேற்று நியூயார்க் சென்றடைந்த சுஷ்மா சுவராஜை அமெரிக்காவுக்கான இந்திய தூதர் நவ்தேஜ் சர்னா, ஐ.நா.வுக்கான இந்தியவின் நிரந்தர பிரநிதி சையத் அக்பரூதின் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.முதல் நாளான நேற்று துனிசியா வெளியுறவுத் துறை அமைச்சர் டானிஷ் வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பூடான் பிரதமர் டாப்கே ஆகியோரை சுஷ்மா சுவராஜ் சந்தித்தார்.

இன்று உலக தலைவர்களுடனா சந்திப்புகளுடன், அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி வைக்கும் ஐ.நா.வின் சீர்திருத்தங்கள் பற்றிய உயர் மட்டக் கூட்டத்திலும் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார்.

இந்தப் பயணத்தில் சுமார் 20 நாடுகளுடன் இருதரப்பு உறவு குறித்த ஆலோசனையில் பங்கேற்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஐ. நா. பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டுவந்த சீர்திருத்தங்களை ஆதரித்த 120 நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து