முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

68 பைசா காசோலைகளை பிரதமருக்கு பிறந்தநாள் பரிசாக அனுப்பிய விவசாயிகள்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

ராயலசீமா: பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் பரிசாக 68 பைசா காசோலைகளை ஆந்திர மாநில விவசாயிகள் அனுப்பியுள்ளனர்.

ஆந்திராவின் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த 4 மாவட்ட விவசாயிகள் வறட்சியின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் பகுதியில் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ராயலசீமா விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தங்கள் பிரச்சினையை எடுத்துரைக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளான நேற்று அவருக்கு 68 பைசா காசோலைகளை ராயலசீமா விவசாயிகள் அனுப்பியுள்ளனர்.

சகு நீதி சாதன சமிதி என்ற தொண்டு நிறுவனம் ஆயிரக்கணக்கான விவசாயிகளிடம் இருந்து 68 பைசா காசோலைகளைப் பெற்று பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளது. இனிமேலாவது தங்கள் பிரச்சினை குறித்து பிரதமர் நரேந்திர மோடி கவனம் செலுத்துவாரா என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து