முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கத்தின் பின்னணியில் மத்திய அரசு இல்லை : தமிழிசை மறுப்பு

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் பின்னணியில் மத்திய அரசு இல்லை என தமிழிசை சவுந்தரராஜன் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார்.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை சபாநாயகர் தனபால் நேற்று அதிரடியாக தகுதி நீக்கம் செய்தார். இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசோ, ஆளுநரோ காரணம் இல்லை என அவர் கூறினார்.

உட்கட்சி பிரச்சனை மற்றும் குழப்பமான அரசியல் சூழ்நிலையிலேயே சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் என்றும் அவர் கூறினார். இதற்கு எப்படி மத்திய அரசும், ஆளுநரும் பொறுப்பாக முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் ஆளுநரையும், மத்திய அரசையும் குறை சொல்வது பிரச்சனையை திசை திருப்பும் நடவடிக்கை என்றும் அவர் கூறினார். எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது சபாநாயகர் தீவிர ஆலோசனை நடத்தியே முடிவு எடுத்திருப்பார் என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து