முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் இறுதி தீர்ப்பு ஒத்திவைப்பு - சுப்ரீம் கோரட் அறிவிப்பு

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

புதுடெல்லி : காவிரி வழக்கில் 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இறுதிக்கட்ட வாதங்கள் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து சுப்ரீம் கோர்ட் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது.

இறுதிகட்ட வாதம்

காவிரி நதி நீர்ப்பங்கீடு தொடர்பாக காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதித் தீர்ப்பபை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீதான இறுதிக்கட்ட வாதம் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி தொடங்கியது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முன்வைத்தனர்.

மத்திய அரசு வாதம்

மாநிலங்கள் தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், மத்திய அரசு நேற்று முன்தினம் தனது வாதத்தை முன்வைத்தது. அப்போது மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, “காவிரி போன்ற இரு மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பிரச்சினைகளில் நாடாளுமன்றமே முடிவெடுக்க முடியும். தீர்ப்பாயத்தின் உத்தரவுகளை முடிவு செய்யும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது, நீதிமன்றம் தலையிட முடியாது” என்றார். மேலும், காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நாடாளுமன்றத்தின் முடிவிற்கு கட்டுப்பட்டது என்றும், தீர்ப்பாயம் அளித்த தீர்ப்பை திருத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

இதையடுத்து, காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறை என்றும் தெரிவித்தது. நேற்று மத்திய அரசு தனது வாதத்தை நிறைவு செய்தது. காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் நேற்றுடன் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோரட் ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து