எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகை : எத்தனை துரோகங்களாலும், வஞ்சகங்களாலும் அம்மாவின் இந்த ஆட்சியை அசைக்கவே முடியாது என்று நாகப்பட்டினத்தில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
நாகையில் நேற்று நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது.,
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலே நலத்திட்டங்களால் பயன்பெறாத வீடுகளே தமிழ் நாட்டில் இல்லை. நலத்திட்டங்களை விரிவாகச் சொல்வதற்கு இந்த மாநாட்டில் நேரம் இல்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த மண்ணிலே பிறக்கின்ற உயிருக்கும், நீரில்லாமல் தவிக்கின்ற பயிருக்கும் புனர் வாழ்வு கொடுத்தவர் நம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தன் வீடு, தன் மக்கள் என்பதுபோல் வாழாமல், என் நாடு, என் மக்கள் என்று வாழ்ந்திட்ட தியாகத்தின் திருஉருவம் நம் அம்மா.
இந்த பாராட்டுகளை எல்லாம் பார்க்கும் பொழுது,. எனக்கு எம்.ஜி.ஆர்.தான் நினைவுக்கு வருகிறார். ஒரு கதையும் நினைவுக்கு வருகிறது. ஒரு விவசாயி இருட்டில் காட்டுப் பாதையைக் கடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருட்டிலே எப்படிக் கடப்பது என்று பயந்து போய் நின்றிருந்த விவசாயிக்கு, ஞானி ஒருவர் விளக்கு ஒன்றைக் கொடுத்தார். பத்து மைல் போக வேண்டுமே, இந்த விளக்கு பத்தடி தூரத்திற்குக் கூட வெளிச்சத்தைத் தராதே, எப்படி காட்டுப் பாதையைக் கடப்பது என்று விவசாயி குழம்பிப் போய் நின்றிருந்தான். உன் கையிலே நான் கொடுத்த விளக்கு இருக்கிறது. தைரியமாகப் போ என்றார் ஞானி. விவசாயி இருட்டில் நடக்க ஆரம்பித்தான்.
முதல் பத்தடி தாண்டிய பிறகு, அந்த விளக்கு அடுத்த பத்தடிக்கு வெளிச்சத்தைத் தந்தது. இப்படியே அடுத்தடுத்து கடக்க வேண்டிய பத்து மைலுக்கும், அந்த விளக்கு வெளிச்சத்தை தந்து கொண்டே இருந்தது. தமிழக மக்களுக்கு வழிகாட்டுவதற்காக எம்.ஜி.ஆர். என்ற அரசியல் ஞானி, கொடுத்ததுதான் ஜெயலலிதா எனும் அற்புத விளக்கு. சிலர்போல் தனக்கு விழும் மாலைகளைப் பற்றிச் சிந்திக்காமல், மக்கள் நலனைப் பற்றியே சிந்தித்தவர் ஜெயலலிதா.. சிலர்போல் போர்த்தப்படும் சால்வைகளைப் பற்றியே நினைக்காமல் செய்யப்போகும் சாதனைகளைப் பற்றியே நினைத்தவர் ஜெயலலிதா. அந்தப் பாடங்களையெல்லாம் ஜெயலலிதாவிடம் கற்று தேர்ந்து கொண்ட விசுவாசத் தொண்டர்கள் நடத்துகின்ற ஜெயலலிதாவின் ஆட்சி மீது, சிலர் கல்லெறிந்து கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதாவின் விசுவாசத் தொண்டர்கள் பூனைகள் அல்ல, பலம் வாய்ந்த யானைகள். தமிழக மக்களின் "அன்பு" என்ற அங்குசத்துக்கு மட்டுமே அடி பணிவார்கள். எதிரிகளின் சூழ்ச்சிக்கும், துரோகிகளின் வஞ்சகங்களுக்கும் அடி பணிய மாட்டார்கள். நாங்கள் மறைந்த முதல்வர் ஜெயலலிதா காட்டிய நேர்வழியிலே. ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த நல்லாட்சியை குறுக்கு வழியிலே, கவிழ்த்து விட சதி செய்கிறார்கள். பகவத் கீதையிலே ஒரு வாசகம் உண்டு. “விநாச காலே விபரீத புத்தி” இதன் பொருள் “கெட்ட புத்தி வந்தால். கெட்டதுதான் நடக்கும்”. நம்மை எதிர்ப்பவர்களுக்கு கெட்ட புத்தியும் வந்து விட்டது. கெட்ட நேரமும் வந்து விட்டது. அதனால் இனிமேல் அவர்களுக்கு கெட்டதுதான் நடக்கும். அவர்களது விபரீத புத்தியால் ஏற்படும் விளைவுகள், அவர்களை அடியோடு அழித்துவிடும். ஆனால், எத்தனை துரோகங்களாலும், எத்தனை வஞ்சகங்களாலும் ஜெயலலிதாவின் ஆட்சியை மட்டும், அசைக்கவே முடியாது. மக்களுக்காக, மக்கள் நலனுக்காக எம்.ஜி.ஆர். அடிச்சுவட்டில், ஜெயலலிதா வழிகாட்டியபடி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.