முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் கனமழை தொடர்கிறது : ரயில், விமான போக்குவரத்து பாதிப்பு

வியாழக்கிழமை, 21 செப்டம்பர் 2017      இந்தியா
Image Unavailable

மும்பை : மும்பை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று 2-வது நாளாக கனமழை பெய்தது. இதனால் பஸ், ரயில், விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நேற்று முன்தினம் கனமழை பெய்ய தொடங்கியது. இடை விடாது பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது நாளாக மும்பை மற்றும் புறநகர் பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்தது. இதனால் பஸ், புறநகர் ரயில், விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று முன்தினம் இரவு 183 பயணிகளுடன் தரையிறங்கும்போது கனமழையால் ஓடுபாதையில் நழுவி சென்று சேற்றில் சிக்கிக் கொண்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும், முக்கிய ஓடுபாதையில் விமானம் சிக்கி இருப்பது, கனமழை மற்றும் வெளிச்சம் இல்லாததால் மும்பைக்கு வந்த சுமார் 56 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது.

மும்பை விமான நிலையம் நாட்டின் 2-வது மிகப்பெரியது. இங்கு ஒரு நாளைக்கு 930 விமானங்கள் வந்து செல்கின்றன.மும்பையில் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் புறநகர் ரயில்களில் கனமழை காரணமாக கூட்டம் இல்லை. இயக்கப்பட்ட சில ரயில்களும் கால தாமதமாக வந்து செல்கின்றன. நீண்ட தூரம் செல்லும் மும்பை எக்ஸ்பிரஸ், குஜராத் எக்ஸ்பிரஸ், சவுராஷ்டிரா எக்ஸ்பிரஸ், பந்த்ரா - சூரத் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக தெற்கு மும்பை, போரிவிலி, கண்டிவிலி, அந்தேரி, பந்தப் ஆகிய பகுதிகளில் வழக்கத்துக்கு மாறாக கனமழை பெய்து வருகிறது. இதற்கிடையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 5.30 மணி வரையில் கொலாபா வானிலை ஆய்வு மையத்தில் 210 மி.மீ. மழையும், சாண்டாகுரூஸ் வானிலை ஆய்வு மையத்தில் 303.7 மி.மீ. மழையும் பதிவாகி உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இது உச்சபட்ச மழை அளவு என்று அவர்கள் கூறினர். மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு 2-வது நாளாக நேற்றும் விடுமுறை அளிக்க அரசு உத்தரவிட்டது. இரண்டு நாட்களாக கனமழை பெய்தாலும் அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்கவில்லை என்று மும்பை மாநகராட்சியின் இயற்கை பேரிடர் மேலாண்மைப் பிரிவு அதிகாரிகள்  தெரிவித்தனர். இதற்கிடையில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து