முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க அணு ஆயுதம் வைத்துள்ளோம்: பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி மிரட்டல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு பதிலடி கொடுப்பதற்காகவே குறுகிய தூர இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிறோம் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகினார். இதையடுத்து புதிய பிரதமராக பொறுப்பேற்ற ஷாஹித் ககான் அப்பாஸி ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

இதனிடையே அந்நாட்டு சிந்தனை அமைப்பான வெளியுறவு விவகாரங்களுக்கான கவுன்சிலில் அப்பாஸி பேசியதாவது:
இந்திய ராணுவத்திடம் ‘கோல்ட் ஸ்டார்ட் டாக்ட்ரின்’ என்ற அணு ஆயுதம் உள்ளது. இதைக் கொண்டு தாக்குதல் நடத்தினால், பதிலடி கொடுப்பதற்காக குறுகிய தூர

இலக்கை தாக்கும் திறன் வாய்ந்த அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்துள்ளோம். அதேநேரம் அணு ஆயுதங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். இவற்றைக் கட்டுப்படுத்துவது மற்றும் இயக்குவது தொடர்பாக அணு ஆயுத ஆணையம் முடிவு எடுக்கும். எனவே, அணு ஆயுதங்கள் தீவிரவாதிகள் கைக்கு சென்றுவிடுமோ என்ற சந்தேகம் தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானுடன் எந்த நேரமும் போர் மூளும் அபாயம் இருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால் பதிலடி கொடுப்பதற்காக, இந்திய ராணுவம் கோல்ட் ஸ்டார்ட் டாக்ட்ரின் என்ற அணு ஆயுதத்தை தயாரித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து