முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அவினாசி அருகே விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி இரங்கல்

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, அவினாசி அருகே விபத்தில் பலியான 6 பேர் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், தெக்கலூர் கிராமம், கோயம்புத்தூர் -சேலம், தேசிய நெடுஞ்சாலையில் இன்று (நேற்று) அரசு பேருந்தும், ஸ்கார்ப்பியோ வாகனமும், மோதிய விபத்தில், ஸ்கார்ப்பியோ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இந்த வாகனத்தில் பயணம் செய்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்தைச் சேர்ந்த,  பி.என். கந்தசாமி, மணி (எ) முத்துசாமி மற்றும் ரத்தினம், சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டத்தைச் சேர்ந்த எஸ். ஜேம்ஸ் (எ) ராமு,  கே.கதிர்வேல் மற்றும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த நல்லசாமி ஆகிய ஆறு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த விபத்தில் ஓட்டுநர்  பாலமுருகன் என்பவர் பலத்த காயமடைந்துள்ளார் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் வாகன ஓட்டுநருக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மாவட்ட நிருவாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்து குறித்து அறிந்தவுடன், மீட்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும், அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்து கொடுக்கவும், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறவும் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை  அமைச்சர்  பி.தங்கமணி, மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து