முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பட்டாசு விற்பனையை தடுக்க சரத்குமார் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, சமக நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை:-

தீபாவளி நேர பட்டாசு விற்பனைதான் பட்டாசுத் தொழிற்சாலைகளின் லாபத்தையும், தொழிலாளர்களின் வருவாயையும் உறுதிசெய்யும். சமீபகாலமாக பட்டாசுத் தொழிலை நலிவடையச் செய்யும் விதமாக, சீன பட்டாசுகள் சந்தைக்கு வருவது கவலை அளிக்கிறது.

இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற கோஷத்தை முழங்கும் பிரதமர் மோடி, நம் நாட்டுக்குள் சீன பட்டாசு நுழையக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும். சீன பட்டாசு விற்பனையை தமிழக அரசும் முற்றிலும் தடை செய்ய வேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். விலை மலிவு என்பதற்காக, சீன பட்டாசுகளை வாங்கி, பட்டாசுத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைத்துவிடக்கூடாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து