எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தூர் : இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இந்தூரில் இன்று நடக்கிறது. இந்திய அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
முன்னிலை
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 5 ஒருநாள் போட்டி தொடரில் இதுவரை நடந்த 2 ஆட்டத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது . சென்னையில் நடந்த முதல் போட்டியில் 26 ரன் வித்தியாசத்திலும், கொல்கத்தாவில் நடந்த 2-வது போட்டியில் 50 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது.
வெற்றி பெறும்...
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடக்கிறது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் வென்று ‘ஹாட்ரிக்’ சாதனையுடன் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழும் இந்திய அணி இந்த தொடரில் மிகவும் நம்பிக்கையுடன் ஆடி வருகிறது. இலங்கை தொடரில் 9 ஆட்டத்தில் தொடர்ச்சியாக வென்றது. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டியில் வென்று இருந்தது. இந்த வெற்றியை நீட்டிக்கும் வகையில் இந்திய வீரர்கள் அனைவரும் திறமையுடன் விளையாடுவார்கள். அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படமாட்டாது என்று தெரிகிறது. ஒரு வேளை மனிஷ் பாண்டே நீக்கப்பட்டால் ராகுலுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.
ஆஸி.க்கு சவால்
ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தொடரை இழக்காமல் இருக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது கட்டாயமாகும். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி திணறி வருகிறது. கேப்டன் சுமித், மேக்ஸ்வெல், பல்க்னெர், ஸ்டோனிஸ் ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இந்தியாவின் சுழற்பந்து வீச்சு ஆஸ்திரேலியாவுக்கு மிகவும் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் அந்த அணியிலும் சிறந்த சுழற்பந்து வீரர்கள் இல்லை.
126-வது போட்டி
ஆஸ்திரேலிய வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவர்கள். அதேநேரத்தில் இந்திய வீரர்கள் தொடரை வெல்ல போராடுவார்கள். இதனால் இந்த ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் போட்டி பாதிக்கப்படுமா? என்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இரு அணிகளும் இன்று மோதுவது 126-வது போட்டியாகும். இதுவரை நடந்த 125 ஆட்டத்தில் இந்தியா 43-ல் ஆஸ்திரேலியா 72-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 போட்டி முடிவு இல்லை.
பகல்-இரவாக நடைபெறும் இன்றைய போட்டி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ், தூர்தர்சனில் இந்தப்போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்திய வீரர்கள்:
விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, ராகுல், கேதர்ஜாதவ், ரகானே, டோனி, ஹர்த்திக் பாண்ட்யா, மனிஷ்பாண்டே, அக்ஷர்பட்டேல், யசுவேந்திர சஹால், பும்ரா, முகமது ஷமி, உமேஷ்யாதவ், குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார்.
ஆஸ்திரேலிய வீரர்கள்:
ஸ்டீவன் சுமித் (கேப்டன்), வார்னர், ஆரோன்பிஞ்ச், மேக்ஸ்வெல், டிரெவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கம் மேத்யூ வாடே, கும்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நைல், பல்க்னெர், ஸ்டோனிஸ், கானே ரிச்சர்ட்சன், ஆடம் ஜம்பா, ஆஸ்டன் அகர், ஹில்டன் கார்ட் ரைட்.
மழை அச்சுறுத்தல்
இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இந்தூரில் ஹால்கோர் மைதானத்தில் இன்று நடக்கிறது. இந்த மைதானம் அதிகமாக ரன் குவிக்க ஏற்றதாக இருக்கும் என்று பிட்ச் பராமரிப்பாளர் சமந்தர் சிங் சவுகான் கூறினார். மேலும் அவர் கூறும்போது, ‘இரண்டு வருடத்துக்குப் பிறகு இந்த மைதானத்தில் சர்வதேசப் போட்டி நடக்கிறது. அப்போது இருந்த பிட்சை விட இப்போது வேறுவிதமாக மாற்றியிருக்கிறோம். இந்தூர் பிட்ச் பவுன்சருக்கு ஏற்றதாக இருக்கும். இப்போதும் அப்படித்தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இந்த பிட்ச் சாதகமாக இருக்கும். பேட்ஸ்மேன்களும் இதில் சாதிக்கலாம். அதிக ரன்கள் குவிக்க வாய்ப்பிருக்கிறது. இங்கு மழை பெய்து வருவதால் பிட்ச் மூடப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 25-ம் தேதி பிட்ச் உருவாக்கத்தில் ஈடுபட்டோம். பிறகு கடந்த 7-ம் தேதி இரண்டு நாள் உள்ளூர் போட்டி இங்கு நடத்தப்பட்டது. அதில் பிட்ச் சிறப்பாக இருந்ததை அறிந்தோம்’ என்றார். இன்றைய போட்டியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ஆட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆரோன் பிஞ்ச் விளையாடுகிறார்
முதல் இரண்டு போட்டிகளில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்த அரோன் பிஞ்ச் இன்றைய போட்டியில் விளையாடுகிறார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்காக பயிற்சி மேற்கொள்ளும்போது தொடக்க வீரர் ஆரோன் பிஞ்சுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் முதல் மூன்று போட்டிகளில் பிஞ்ச் விளையாடமாட்டார் என்று கூறப்பட்டது. தற்போது காயம் குணமடைந்ததால் இன்று இந்தூரில் நடைபெற இருக்கும் 3-வது ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்று அந்த அணியின் துணை கேப்டன் வார்னர் கூறியுள்ளார்.
இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘ஆரோன் பிஞ்ச் வலைப்பயிற்சி மேற்கொண்டதை பார்க்கையில் சிறப்பாக இருந்தது. இன்றைய போட்டியில் இடம்பெறுவதற்கான உடற்தகுதிக்கான அனைத்தையும் செய்து கொண்டிருக்கிறார். அவர் சிறந்த பேட்ஸ்மேன். கடந்த இரண்டு வருடங்களாக ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார். தொடக்க வீரராக பேட்டிங் செய்யும் வகையில் அதிக அளவில் அனுபவம் பெற்றுள்ளார். மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்’’ என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
தங்கம் விலை உயர்வு
19 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
பாராளுமன்ற தேர்தலையொட்டி சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்
19 Apr 2024வாஷிங்டன், இந்தியாவில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் நேற்று தொடங்கியதை குறிப்பிடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
சத்தீஸ்கர் மாநிலத்தில் தவறுதலாக கையெறி குண்டு வெடித்து சி.ஆர்.பி.எப். வீரர் பலி
19 Apr 2024ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் கையெறி குண்டு தவறுதலாக வெடித்ததில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சி.ஆர்.பி.எப். வீரர் உயிரிழந்தார்.
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.