எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி : அம்மாவின் அரசுக்கு எதிராக, துரோகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசினார். அதாவது மு.க.ஸ்டாலினையும், டி.டி.வி. தினகரனையும் மறைமுகமாக அவர் தாக்கி பேசினார்.
கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
மன்னர் இல்லாத நாடு என்று, சில மங்குனிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சியிலே ஒன்றரைக் கோடி விசுவாசத் தொண்டர்களுமே மன்னர்கள்தான். இது எங்கள் ஆட்சி. இது உங்கள் ஆட்சி. இது நமது ஆட்சி. என்று சொல்லுவதைவிட, தமிழக மக்களையும் நம்மோடு இணைத்துக் கொண்டு, இது மக்கள் ஆட்சி என்று முழங்குவோம். சோதனைகளையும், சாதனைகளாக மாற்றுகின்ற வல்லமை அகில இந்தியாவிலேயே, அ.தி.மு.க.வுக்கு மட்டுமே உண்டு என்பதை நிரூபித்துக் காட்டுவோம்.
அம்மா வழிகாட்டிய தர்மத்தின் பாதையிலே சாதனைகளை நோக்கித்தான் நாம் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றிகளை நோக்கித்தான் வீரநடைபோட்டு கொண்டிருக்கிறோம். எதிர்ப்புகள் எந்தத் திசையில் இருந்து வந்தாலும் சரி. எந்த உருவத்தில் வந்தாலும் சரி. அவற்றையெல்லாம் உடைத்தெறிவோம். சில சுயநல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாடு நன்றாக இருந்தாலே பிடிக்காது. நாட்டிலே எதாவது பிரச்சினைகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் பிரச்சினைகளை அவர்களே உருவாக்கி விடுவார்கள்.
சிலருக்கு நாடு அமைதியாக இருந்தாலே பிடிக்காது. எதாவது போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்றாலும் அவர்களே போராட்டங்களைத் தூண்டி விடுவார்கள். இந்த ஆட்சி தொடரக் கூடாது என்று சதி செய்பவர்கள் எல்லோருமே. மக்களின் விரோதிகள் என்று தமிழக மக்கள் சொல்லி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களை, தனது தர்மக் கரங்களால் தாங்கிப் பிடித்த எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை, அம்மாவின் அரசு, அரசு விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதைக்கூட சிலர் விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். திரையுலகில் சம்பாதித்ததை எல்லாம் மக்களுக்காகவே அள்ளி வழங்கியவர் எம்.ஜி.ஆர்.
மக்களுக்காக கொடுத்தவரின் நூற்றாண்டு விழாவை, அரசு விழாவாக கொண்டாடக் கூடாதா? நேர்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு. தூய்மையான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு. கறைபடாத ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு. புனிதமான ஆட்சியைக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு, அம்மாவின் அரசு, நூற்றாண்டு விழா கொண்டாடக் கூடாதா? மக்கள் திலகத்திற்கு கொண்டாடுகின்ற விழா என்று மக்களே மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள். அதைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் மட்டும் பொறாமையில் வெந்து கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவர் இருந்த பொழுதே, அவரை எதிர்க்க திராணி இல்லாதவர்கள், இப்பொழுது அவரது நூற்றாண்டு விழாவை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
விலையில்லா 20 கிலோ அரிசி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். ஏழைப் பெண்களின் தாலிக்கு தங்கம் கொடுப்பதை எதிர்ப்பவர்கள். கிரைண்டர், மிக்ஸி, மின்விசிறி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். வசதி இல்லாத கிராமப்புற மக்களுக்கு கறவை மாடுகள், ஆடுகள் கொடுப்பதை எதிர்ப்பவர்கள். 100 யூனிட் மின்சாரம் கொடுப்பதை எதிர்ப்பவர்கள். மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். மகப்பேறு உதவி கொடுப்பதை எதிர்ப்பவர்கள். முதியோர்களுக்கு உதவித் தொகை கொடுப்பதை எதிர்ப்பவர்கள். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக உயர் சிகிச்சை அளிப்பதை எதிர்ப்பவர்கள். அம்மா உணவகங்கள் மூலம் அடித்தட்டு மக்கள் பசியாறுவதை எதிர்ப்பவர்கள்.
இந்த தீய மனம் கொண்டவர்கள்தான். அம்மாவின் இந்த அரசை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உத்தம புத்திரர்கள்தான். புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படுவதை எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். புரட்சித் தலைவரின் நூற்றாண்டு விழா என்பது. செம்மொழி மாநாடு என்ற பெயரிலே, மக்கள் பணத்தில் கொண்டாடப்பட்ட குடும்ப விழா அல்ல, பல கோடி மக்களின் பசியாற்றிய, அன்பு தெய்வத்தின் நூற்றாண்டு விழா. அம்மாவின் அரசு, வெறும் மணல் கோட்டை அல்ல. சுலபமாக கலைத்து விடுவதற்கு, எம்.ஜி.ஆரின் தர்மத்தால். அம்மாவின் கடும் உழைப்பால். தன்னலமற்ற தியாகத்தால். உருவான அரசு. அம்மாவின் ஆட்சியைக் கலைப்பதற்கு, இனி ஒருவன் இந்த மண்ணில் பிறந்துகூட வர முடியாது.
தமிழக மக்களைக் காப்பாற்றுவதற்கு, தர்மமும், தர்மமும் சேரலாம், சத்தியமும், சத்தியமும் சேரலாம், நேர்மையும், நேர்மையும் சேரலாம், வாய்மையும், வாய்மையும் சேரலாம், ஆனால் அம்மாவின் அரசுக்கு எதிராக, துரோகமும், துரோகமும் சேர்ந்திருக்கிறது. வஞ்சகமும், வஞ்சகமும் சேர்ந்திருக்கிறது. பொய்மையும், பொய்மையும் சேர்ந்திருக்கிறது. விஷத்தோடு, விஷம் சேர்ந்திருக்கிறது. நஞ்சு மணம் படைத்தவர்களை, பஞ்சு பஞ்சாக பறக்க விடும் ஆற்றல் அம்மாவின் விசுவாத் தொண்டர்களுக்கு இருக்கிறது.
கழகத்தை அழிக்க நினைக்கும் விஷம் மணம் கொண்டவர்களை வீழ்த்துக்கின்ற ஆற்றல், விசுவாசத் தொண்டர்களுக்கு இருக்கிறது. தமிழக அரசியலில், அம்மாவின் ஆட்சிக்கு எதிராக, ஒரு விபரீத நட்பு உருவாகியிருக்கிறது. தமிழக மக்களுக்காக. அவர்களின் நலனுக்காக. எம்.ஜி.ஆரின் லட்சியப் பாதையிலே, அம்மாவின் புனிதப் பாதையிலே, விசுவாசத் தொண்டர்கள் நடத்தும், அம்மா அவர்களின் ஆட்சி, தொடர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறி, நிறைவு செய்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.