முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் 'பரோல்' நீட்டிப்பு - தமிழக அரசு அறிவிப்பு - தலைவர்கள் வரவேற்பு

சனிக்கிழமை, 23 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோலை மேலும் ஒரு மாத காலம் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

 7 பேருக்கு ...

கடந்த 1991-ம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடித்து படுகொலை செய்யப்பட்டார்.  நள்ளிரவில் நடந்த இந்த படுகொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் என்ற அறிவு, நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் இந்த தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்கள் 7 பேரும் வேலூர், புழல் உள்ளிட்ட சிறைகளில் அடைக்கப்பட்டு கடந்த 26 ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் உள்ளனர். தண்டனைக்காலம் முடிவடைந்தும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. அவர்களை விடுவிக்கக்கோரி பலமுறைகோரியும் அவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையிலேயோ  இருக்கிறார்கள்.

சட்டசபையில் தீர்மானம் ...

நளினி, முருகன் உள்பட அந்த 7 பேர்களையும் விடுவிக்கலாம் என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசுக்கும் தீர்மானம் அனுப்பப்பட்டது. மத்திய அரசு தீர்மானத்துக்கு அனுமதி அளிக்காவிட்டால் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த தீர்மானம் தீர்த்துப்போனது.

தாயார் கோரிக்கை...

இந்தநிலையில் பேரறிவாளனின் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் பேரறிவாளனை பரோலில் அனுப்ப வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு மனு செய்தார். அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. அதேநேரத்தில் பேரறிவாளனை பரோலில் விடுவிக்க வேண்டும் என்று சட்டசபையில் தீர்மானமும் கொண்டுவரப்பட்டது.

அரசாணை வெளியீடு

அற்புதம்மாள் கோரிக்கையானது விதிமுறைகளின்படி இருப்பதால் தமிழக அரசின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனை ஏற்று பேரறிவாளமன் ஒருமாத காலம் பரோலில் செல்ல தமிழக அரசு அனுமதித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. அதன் படி கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் வேலூர் சிறையில் இருந்து கடந்த மாதம் 24-ம் தேதி இரவு ஒரு மாத பரோலில் விடுவிக்கப்பட்டார்.

பரோல் நீ்ட்டிப்பு

பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளன் தனது சொந்த ஊரான திருப்பத்தூரில் உள்ள வீட்டில் கடந்த ஒரு மாதம் காலமாக இருந்து வருகிறார். அவரின் ஒரு மாத பரோல் இன்றுடன் முடிவடைகிறது. பேரறிவாளின் தந்தைக்கு மேலும் அறுவை சிகிச்கைகள் செய்ய வேண்டிருப்பதால் மேலும் பரோலை நீடிக்கவேண்டும் என்று அவரின் தாய் அற்பும்மாள் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கை மனு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகமும் ஆலோசனை செய்தனர். இந்நிலையில் அவரின் கோரிக்கையை ஏற்று மேலும் ஒரு மாதம் பரோலை நீடித்து நேற்று இரவு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை பல்வேறு கட்சி தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து