முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியா வெகுகாலம் நீடித்திருக்காது: ட்விட்டரில் அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன் : வடகொரியா வெகுகாலம் நீடித்திருக்காது என்ற ட்விட்டரில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'ஐ.நா., பொது சபையில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் பேசியது அவரது அதிபர் கிம் ஜாங் உன்னின் கருத்து என்றால் வடகொரியா வெகுகாலம் நீடித்திருக்காது' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்மையில், ஐ.நா., பொது சபையில் பேசிய வடகொரியாவின் வெளியுறவு அமைச்சர் ரி யோங் ஹோ, "டிரம்ப் மனநலம் சரியில்லாதவர். டிரம்ப் ஒரு சூதாட்டக்காரர். நிலத்தை அபகரிப்பதற்காக மிரட்டல்களிலும் பித்தலாட்டங்களிலும் ஈடுபட்டவர். அவரது மிரட்டல்கள் போர் ஏற்படும் அபாயத்தையே அதிகரித்துள்ளது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் வடகொரியாவை எச்சரிக்கும் முன்னர் ஒன்றுக்கு இருமுறை முன்யோசனை செய்வது நலம்" எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஐ.நா., பொது சபையில் வடகொரிய வெளியுறவு அமைச்சர் பேசியது அவரது அதிபர் கிம் ஜாங் உன்னின் கருத்து என்றால் வடகொரியா வெகுகாலம் நீடித்திருக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார். நேற்றிரவு அவர் இந்த ட்வீட்டை பதிவு செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து