முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜிஹாதிக்களை உருவாக்குகிறீர்கள் - பாகிஸ்தான் மீது சுஷ்மா சுவராஜ் பகிரங்க குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

நியூயார்க் : நாங்கள் அறிஞர்களையும் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளோம்; நீங்களோ ஜிஹாதிக்களை உருவாக்கியிருக்கிறீர்கள் என பாகிஸ்தானை பகிரங்கமாக சாடினார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ். 22 நிமிடங்கள் பேசிய சுஷ்மா ஸ்வராஜ், பாகிஸ்தான் மீது சரமாரி குற்றஞ்சாட்டினார். அவர் இந்தி மொழியிலேயே பேசினார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. பொது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தான் பிரதமர் ஷாகித் ககான் அப்பாஸி பேசினார். அப்போது காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினார். பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தீவிரவாதத்தை தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டினார்.

இன்று இந்தியா உலகளவில் ஐடி ஜாம்பவானாகக் கருதப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானோ பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாகவே கருதப்படுகிறது - சுஷ்மா சுவராஜ்

இந்நிலையில், இக்குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் ஐ.நா. அவையில் பேசிய சுஷ்மா சுவராஜ், "வியாழனன்று பேசிய பாக் பிரதமர் அப்பாஸி, இந்தியா தீவிரவாதத்தை தூண்டுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மனித உரிமைகளை நாங்கள் மீறுவதாகவும் கூறியிருந்தார். அவரது பேச்சை கேட்டவர்கள் அனைவரது மனதிலும் ஒரே ஒரு எண்ண அலையே எழுந்தது. அது, "மனித உரிமை மீறல், தீவிரவாதம் குறித்து யார் பேசுகிறார்கள் எனப் பாருங்கள்" என்பதே அந்த எண்ண ஓட்டம். மரணத்தையும், மனிதநேயத்தை வேரறுக்கும் பாதகத்தையும் பெருமளவில் அரங்கேற்றும் ஒரு நாடு இங்கே அரங்கின் நடுவே நின்று இதைப் பேசுவதா என்றே அனைவரும் கருதினர்.

பாகிஸ்தானின் நிறுவனர் ஜின்னாவின் வெளியுறவு கொள்கை அமைதியையும் நட்பையும் வலியுறுத்துவதாக பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி கூறியிருந்தார். எங்கள் பிரதமர் மோடி பதவியேற்ற நாள் முதலாகவே பாகிஸ்தானுக்கு நட்புக்கரம் நீட்டி வருகிறார். பாகிஸ்தானுடன் அமைதியை நிலைநாட்ட முயல்கிறார். ஆனால், இந்தியாவின் நட்புகரத்தை பாகிஸ்தான் ஏற்க மறுக்கிறது என்பதை அவர்களே விளக்க வேண்டும்.

இதற்கு முன்னதாகவும் இருநாடுகளுக்கும் இடையேயான பிரச்சினைகளை சுமுக பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள சிம்லா உடன்படிக்கை, லாகூர் உடன்படிக்கை எல்லாம் உருவாக்கப்பட்டது. ஆனால். பாகிஸ்தான் தலைவர்கள் அவற்றையெல்லாம் தோதாக மறந்துவிடுவது ஏனோ?

இத்தருணத்தில் பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கு நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவும் பாகிஸ்தானும் வெகு சில மணி நேரங்களில் இரு தேசங்களாக பிரிந்துவிட்டன. ஆனால், அதன்பிறகு இன்று இந்தியா உலகளவில் ஐடி ஜாம்பவானாகக் கருதப்படுகிறது. ஆனால், பாகிஸ்தானோ பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலையாகவே கருதப்படுகிறது.

நாங்கள் அறிஞர்களையும் மருத்துவர்களையும் பொறியாளர்களையும் உருவாக்கியுள்ளோம்; நீங்களோ ஜிஹாதிக்களை உருவாக்கியிருக்கிறீர்கள். மருத்துவர்கள் உயிர் காப்பர். ஆனால், நீங்கள் உருவாக்கும் ஜிஹாதிக்கள் பிறர் உயிரை பறிப்பர். நாங்கள் வறுமைக்கு எதிரான யுத்தத்தில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், பாகிஸ்தானோ எங்களுக்கு எதிரான யுத்தத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது" என்றார்.

துணிச்சலான முடிவு:

அவர் மேலும் பேசும்போது, "பணமதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து பேசிய சுஷ்மா சுவராஜ், "பணமதிப்பு நீக்க நடவடிக்கை மிகத் துணிச்சலான முடிவு. ஊழலின் விளைவான கறுப்புப் பணத்தின் புழக்கத்தை முடக்க மேற்கொள்ளப்பட்ட சவாலான நடவடிக்கையே பணமதிப்பு நீக்கம்.

அதேபோல், நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை நாங்கள் அமல் படுத்தியிருக்கிறோம். நாங்கள் மேற்கொண்டுள்ள 'பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பீர்; பெண் குழந்தைகளை காப்பாற்றுவீர்' திட்டம் மூலம் பாலின சமத்துவம் மேம்பட்டுள்ளது. எங்களது தூய்மை இந்தியா திட்டம், மக்களின் சமூக பார்வையிலும் பழக்கவழக்கங்களிலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து