முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு - அக். 1-ம் தேதி முதல் அமல்படுத்த வர்த்தக அமைச்சகம் முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

பெய்ஜிங் : வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும்  அக். 1-ம் தேதி முதல்  இதை அமல்படுத்த  சீன வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

ஐநா மற்றும் உலக நாடுகளின் தடையை மீறி வடகொரியா தொடர்ந்து அணு குண்டு, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் அந்த நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் அடுத்தடுத்து பொருளாதார தடை விதித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியா கடந்த 3-ம் தேதி புதிதாக அணுகுண்டு சோதனை நடத்தியது. இதையடுத்து, அடுத்த 3 மாதத்தில் 5 லட்சம் பேரல் கச்சா எண்ணெய்க்கு மேல் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என கடந்த வாரம் ஐநா புதிய தடையை கொண்டு வந்தது.

இதை வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமல்படுத்த சீன வர்த்தக அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோல ஜவுளி இறக்குமதிக்கு முழு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து