முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ விசாரணை தேவையில்லை : தமிழிசை சவுந்தரராஜன்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      உலகம்
Image Unavailable

புதுடெல்லி :  ஜெயலலிதாவின் மரணத்துக்கு சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

டெல்லியில் அமித்ஷா தலைமையில் பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் கலந்துகொள்ள டெல்லி சென்ற தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசுதான் விசாரிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் சந்தேகத்தை தமிழக அரசு தான் தீர்க்க வேண்டும். எதற்கெடுத்தாலும், சிபிஐ விசாரணை கோரக் கூடாது'. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது இட்லி சாப்பிட்டார்; சட்னி சாப்பிட்டார் என்று சொன்னதெல்லாம் பொய் என்று கூறி மக்களிடம் மன்னிப்பும் கேட்டார். ஜெயலலிதா குறித்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் வாக்குமூலத்தையடுத்து சிபிஐ விசாரணை வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. இந்த நிலையில்தான் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழிசை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து