முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின், அக்செல்சன் சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

டோக்கியோ : ஜப்பான் சூப்பர் சீரிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் பிரிவில் விக்டர் அக்செல்சன், பெண்கள் பிரிவில் கரோலினா மரின் சாம்பியன் பட்டம் வென்றனர்.

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டிகள் நேற்று நடைபெற்றன. ஆண்களுக்கான இறுதிப் போட்டியில் டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் - மலேசியாவின் லீ சாங் வெய் பலப்பரீட்சை நடத்தினார்.

முதல் செட்டை அக்செல்சன் 21-14 என எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் லீ சாங் வெய் சிறப்பாக விளையாடினார். இதனால் ஆட்டம் பரபரப்பாக சென்றது. இறுதியில் லீ சாங் வெய் 21-19 என 2-வது செட்டை கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் விக்டர் அக்செல்சன் சிறப்பாக விளையாடி 21-14 எனக் கைப்பற்றி 2-1 வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான சீனாவின் ஹி பிங்ஜியாவோ - ஸ்பெயினின் கரோலினா மரின் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினார்கள். முதல் செட்டில் இருவரும் மாறிமாறி புள்ளிகள் எடுத்தனர். இறுதியில் கரோலினா மரின் 23-21 என முதல் செட்டை கைப்பற்றினார். 2-வது செட்டை கரோலியான மரின் 21-14 என எளிதாக கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து