முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி கேப்டன்சிப்புக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் டி- 20 கோப்பை

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தலைமையிலான இந்திய அணி 10 வருடங்களுக்கு முன்பு இதேநாளில் தான்  (டித, 24)முதல் டி-20 உலகக் கோப்பையை வென்றது. இது டோனியின் கேப்டன்சிப்புக்கு கிடைத்த முதல் அங்கீகாரம் ஆகும்.

சிறந்த கேப்டன் என்று எல்லோராலும் பாராட்டப்பெற்ற டோனி, அந்த பெயரை பெறுவதற்கு நீண்ட காலம் போராட வேண்டியிருந்தது. ஏனென்றால், டோனிக்கு அதிகம் அதிர்ஷ்டம் இருப்பதாகவே முதல் பலரும் கூறினர். இருப்பினும் முதல் டி20  உலகக் கோப்பையை கைப்பற்றி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்த தொடரை வெல்வதற்கு யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டம், கம்பீரின் நிதான ஆட்டம் என பல காரணங்கள் இருந்தாலும் டோனி முடிவெடுக்கும் தன்மை தான் அதில் முக்கிய பங்கு வகித்தது. குறைந்த அளவு ரன் எடுத்த போதும் மனம் தளராமல் எதிரணியை இறுதிவரை போராடி தோற்கடித்தார். யாருமே எதிர்பார்க்காத போட்டியில் வெற்றியை சாத்தியமாக்கி காட்டினார்.

2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட உலகக் கோப்பை டி20 தொடரில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஸ்காட்லாந்து உடன் டி பிரிவில் இடம்பெற்றது. தென் ஆப்பிரிக்கா நாட்டில் இந்த தொடர் நடைபெற்றது. ஸ்காட்லாந்து உடனான முதல் போட்டி ரத்து செய்யப்பட்டதால், பாகிஸ்தான் உடனான லீக் போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், முதலில் விளையாடிய இந்திய அணி 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இருப்பினும் பாகிஸ்தான் அணியை 141 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது. பின்னர், போட்டி பந்து வீச்சு முறைப்படி முடிவு காணப்பட்டது. இதில் இந்திய வீரர்களின் துள்ளியமான பந்துவீச்சால் வெற்றி சாத்தியமானது.

இதனையடுத்து சூப்பர் 8 பிரிவில் இந்திய அணி ஈ பிரிவில் இடம்பெற்றது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்விஅடைந்த போதும், இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி நுழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தான் யுவராஜ் சிங் 6 பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசினார்.

இறுதிப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். கம்பீர் மட்டும் நிலைத்து ஆடி 75 ரன்கள் சேர்க்க மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணியில் மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த போது கேப்டன் மிஸ்பா உல் ஹாக் மட்டும் நின்று ஆடினர். இதனால், கடைசி ஓவர்களில் பாகிஸ்தான் அணிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு விக்கெட் மட்டுமே மீதமிருந்தது.

கடைசி ஓவரை ஜோகிந்தர் சர்மாவுக்கு டோனி கொடுத்தார். இதனை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஆனால் முதல் பந்தையே ஜோகிந்தர் சர்மா ஒயிடாக வீசினார். அடுத்த பந்தில் மிஸ்பா ஒரு சிக்ஸர் விளாசினார். இதனால் கடைசி 4 பந்தில் வெறும் 6 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

இதனால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுவிடும் என்று அனைவரும் உறுதியாக நினைத்தனர். ஆனால் அதிரடியாக விளையாடியை மிஸ்பாவை 3-வது பந்தை ஸ்வீப் ஷாட் அடித்தார். அதனை ஸ்ரீசாந்த அற்புதமாக கேட்ச் செய்தார். இதனால் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து