முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்களுடன் இன்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேச்சு வார்த்தை - முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : போக்குவரத்து தொழிற்சஙகங்களுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார், இந்த பேச்சுவார்த்தையின்முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.

தமிழக போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளர்கள் அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர், கடந்த வாரம் இதற்கான பேச்சுவார்த்தை தொழிலாளர் நலத்துறை செயலாளர் யாஸ்மின் அகமது முன்னிலையில் நடைபெற்றது. இதில் சுமுக உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. இந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொழிற்சங்கங்களுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார், சென்னை குரோம்பேட்டை அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அண்ணா தொழிற்சங்கம், தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உள்ளிட்ட 38 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அரசு தரப்பில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரோடு, போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் டேவிதார், மாநகர் போக்குவரத்து கழக இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் 8 போக்குவரத்துக்கழகங்களின் இயக்குனர்கள் கலந்துகொள்கின்றனர்,

அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதன் மாநில செயலாளரும் முன்னாள் எம்.எல்ஏவுமான சின்னசாமி, போக்குவரத்துக்கழக தொழிற்சங்க செயலாளர் பழனி ஆகியோர் பங்கேற்கின்றனர், சி.ஐ.டி.யூ சார்பில் அதன் மாநில செயலாளர் ஆறுமுக நயினார், செளந்தரராஜன், ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் சுமுகத்தீர்வு எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்றும் பேச்சுவார்த்தையில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியிடும் முக்கிய அறிவிப்பு தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சித்தரத்தக்கதாக அமையும் என்றும் அண்ணா தொழிற்சங்கத்தின் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சின்னசாமி தெரிவித்தார்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து