முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வண்டியூர் பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணியில் கலெக்டர் வீரராகவராவ்,ஆணையாளர் அனீஷ் சேகர் பங்கேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 செப்டம்பர் 2017      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் வண்டியூர் பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர்  ,கொ.வீர ராகவ ராவ்,  , மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ்சேகர்,  துவக்கி வைத்து தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.
மதுரை மாநகராட்சியினை தூய்மையான சுத்தமான மாநகராட்சியாக மாற்றுவதற்க்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மையே சேவை இயக்கத்தில் தூய்மையை வலியுறுத்தும் வகையில் 15.09.2017 முதல் 02.10.2017 வரை பல்வேறு தூய்;மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி பகுதிகளில் உள்ள பூங்காக்கள், சிலைகள், நினைவு சின்னங்கள், ரவுண்டானாக்கள் (சந்திப்புக்கள்) ஆகிய பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப் பட்டது. அதன்படி மண்டலம் எண்.1 பகுதியில் உள்ள 6 பூங்காக்களும், மண்டலம் எண்.2 பகுதியில் 8 பூங்காக்களும், மண்டலம் எண்.3 பகுதியில் 2 பூங்காக்களும், மண்டலம் எண்.4 பகுதியில் 4 பூங்காக்களும் என மொத்தம் 20 பூங்காக்களும் அதன் சுற்றுப்பகுதியும், முக்கிய தலைவர்களின் சிலைகளும் அதன் சுற்றுப்பகுதியும், முக்கிய இடங்களின் சந்திப்புகளிலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், மண்கூட்டும் பணியாளர்கள், அம்மா திட்டப் பணியாளர்கள் மற்றும் தன்னர்வலர்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் மூலம் தூய்மைப்பணி மேற்கொள்ளப் பட்டது.
முன்னதாக மண்டலம் எண்.2 வண்டியூர் பூங்காவில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தூய்மைப்பணியினை துவக்கி வைத்து அப்பூங்காவில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். இப்பணியில் அலைடு மருத்துவ அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 100 நபர்களும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும், பொதுமக்களும், ஆட்டோ ஓட்டுனர்களும் கலந்து கொண்டனர். இப்பணியின்போது தூய்மையே சேவை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர்  சதிஷ் ராகவன், உதவி நகர்நல அலுவலர்  பார்த்திப்பன், உதவி ஆணையாளர்  பழனிச்சாமி, மக்கள் தொடர்பு அலுவலர்கள்  ரசூல்,  சித்திரவேல், செயற்பொறியாளர்  ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் (தெருவிளக்கு)  செந்தில், சுகாதார அலுவலர்  சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்  செல்வகுமார், மாநகராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து