எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நியூயார்க்: ஐ.நா. பொது சபை கூட்டத்தில் தவறான ஒரு புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது பாகிஸ்தான் குற்றம் சாட்டிய நிலையில் அந்த நாடு பொய் பிரச்சாரம் செய்வதாக இந்திய பெண் அதிகாரி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
ஐ.நா. பொது சபையின் 72-வது கூட்டம் நியூயார்க்கில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த வாரம் பேசிய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஏற்றுமதி செய்வதாக குற்றம் சாட்டினார்.
சுஷ்மா குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதரக நிரந்தர பிரதிநிதி மலீஹா லோதி 23-ம் தேதி பேசினார். அப்போது தெற்கு ஆசியாவில் தீவிரவாதத்தின் தாயகமாக இந்தியா விளங்குவதாக குற்றம் சாட்டினார். மேலும் ஜம்மு காஷ்மீரில் மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், பெல்லட் குண்டுவீச்சால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகைப்படத்தை ஆதாரமாக காண்பித்தார்.
அந்த புகைப்படம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறையின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனால் அந்த பெண் காஷ்மீரைச் சேர்ந்தவர் அல்ல. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியைச் சேர்ந்த ரவியா அபு ஜோமா என்பது தெரிய வந்துள்ளது.
அந்த பாலஸ்தீன பெண்ணை, காஷ்மீர் பெண்ணாக சித்தரித்து ஐ.நா. சபையில் அனுதாபத்தை தேடவும் இந்தியா மீது அவதூறு பரப்பவும் பாகிஸ்தான் தூதர் மலீஹா கபட நாடகமாடினார். ஆனால் அவரின் நாடகம் சில மணி நேரங்களில் அம்பலமான தால் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவு ஏற்பட்டது.
இந்நிலையில், 25-ம் தேதி பேசிய ஐ.நா.வுக்கான இந்திய தூதரக அதிகாரி பவுலோமி திரிபாதி, பாகிஸ்தான் பிரதிநிதியின் குற்றச்சாட்டுக்கு தக்க பதிலடி கொடுத்தார். அப்போது அவர் பேசும்போது, “இந்த அவையில் ஏற்கெனவே பேசிய பாகிஸ்தான் தூதர் இந்தியா மீது பொய் பிரச்சாரம் செய்வதற்காக ஒரு புகைப்படத்தைக் காண்பித்தார். போலியான அந்த புகைப்படத்தைக் காட்டி அவர் கூறிய கருத்துகள் அனைத்தும் பொய்யானவை.
சர்வதேச தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது. ஆனால், இதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக பாகிஸ் தான் மீண்டும் முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில்தான் இந்த புகைப்படத்தைக் காட்டி இந்தியா மீது புகார் கூறியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி காஸா நகர் மீது இஸ்ரேல் போர் விமான தாக்குதல் நடத்தியபோது ரவியாவின் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அவரை, ஹெய்தி லெவைன் என்ற அமெரிக்க புகைப்பட கலைஞர் படம் பிடித்தார். இது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் 2015-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி வெளியானது” என்றார்.
ராணுவ வீரர் படுகொலை
இதையடுத்து, திரிபாதி மற்றொரு புகைப்படத்தைக் காட்டி பேசும்போது, “இது இந்திய இளம் வீரர் லெப்டினன்ட் உமர் பயாஸின் (23) உண்மையான புகைப்படம். போலியானது அல்ல. காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த மே மாதம் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இந்தியா மீது பாகிஸ்தான் கொண்டுள்ள வன்மத்துக்கு இதுதான் சான்று. இந்தப் புகைப்படம் பாகிஸ்தானின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது” என்றார்.
லோதிக்கு ட்விட்டரில் குட்டு
இதனிடையே ஐ.நா. பொது சபையில் பாகிஸ்தானுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய மலீஹா லோதிக்கு எதிராக பாகிஸ்தானியர்களே ட்விட்டரில் கருத்து தெரிவித்தனர்.
துணிச்சலான திரிபாதி
ஐ.நா.வுக்கான இந்திய தூதரகத்தின் இளம் அதிகாரியாக பவுலோமி திரிபாதி பணியாற்றி வருகிறார். இவர் மிகவும் துணிச்சலாக செயல்பட்டு வருகிறார்.
ஜெனீவாவைச் சேர்ந்த மனித உரிமை தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு ஆலோசகர் அந்தஸ்து வழங்க ஐ.நா. கவுன்சில் கடந்த ஜூலை மாதம் மறுப்பு தெரிவித்தது. இதற்கு இந்தியா ஆதரவு தெரிவித்தது. குறிப்பாக இது தொடர்பாக நடந்த விவாதத்தின்போது, இந்திய அதிகாரியான பவுலோமி திரிபாதி, “இந்த தொண்டு நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக யுஏஇ அறிவித்துள்ள நிலையில் அதற்கு ஆலோசகர் அந்தஸ்து வழங்கக் கூடாது” என தெரிவித்தார். அந்த தொண்டு நிறுவனத்தை தீவிரவாத அமைப்பாக யுஏஇ அறிவித்திருந்ததும் அதன் நிறுவனருக்கு அமெரிக்காவும் ஐ.நா.வும் தடை விதித்திருந்ததுமே இதற்குக் காரணம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.