முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட அளவிலான மாணவர்கள் திறனாய்வுப் போட்டி கலெக்டர் நடராஜன் தொடங்கி வைத்தார்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட அளவிலான மாணவர்கள் திறனாய்வு போட்டியை கலெக்டர் முனைவர் நடராஜன் தொடங்கி வைத்தார்.
 ராமநாதபுரம் செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக மாவட்ட அளவிலான மாணவர்கள் திறனாய்வுப் போட்டியினை கலெக்டர் முனைவர் நடராஜன் துவக்கி வைத்து மாணவ, மாணவியர்களின் திறனாய்வு படைப்புகளைப் பார்வையிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-  தமிழ்நாடு அரசு இளைஞர்களின் தொழிற்திறனை வெளிப்படுத்தும் வகையில் மாநில அளவில் திறனாய்வு போட்டிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  இம்மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர்களைத் தேர்வு செய்ய ஏதுவாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக இன்றைய தினம்  செய்யதம்மாள் பொறியியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான மாணவர்கள் திறனாய்வுப் போட்டிகள் நடைபெறுகின்றது.  
 மாவட்ட அளவில் நடைபெறும் இந்த திறனாய்வு போட்டியில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் இருந்து இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல் , மின்னியல் மற்றும் கருவி மயமாக்கல் ஆகிய துறைகளைச் சார்ந்த மொத்தம் 220 மாணவ, மாணவியர்கள் பதிவு செய்து 75 திறனாய்வு படைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.  குறிப்பாக குறைந்த செலவில் கடல்நீரை குடிநீராக்குதல், சூரிய மின்சக்தி இயங்கும் வாகனம், சாலை விபத்து மற்றும் தீ விபத்துகளைத் தவிர்ப்பதற்கான தானியங்கி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான திறனாய்வு திட்டங்கள் இப்போட்டியில் இடம்பெற்றுள்ளன. 
 மாணவ, மாணவியர்களின் திறனாய்வு படைப்புகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த வல்லுநர் குழுவின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு சிறந்த படைப்புகளாக தேர்ந்தெடுக்கப்படும் முதல் இரண்டு படைப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுவதோடு வருகின்ற அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான திறனாய்வு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவார்கள். மாணவ, மாணவியர்கள் தங்களது தனித்திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொண்டு இதே போன்று பல்வேறு ஆக்கப்பூர்வமான புதிய படைப்புகளை கண்டுபிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு பேசினார். நிகழ்ச்சியில் பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்  எஸ்.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர்.பி.மாரிமுத்து உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து