முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாலுமாவடி பாதகரை சுவாமி கோவிலில் 5004 திருவிளக்கு பூஜை

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      தூத்துக்குடி

திருச்செந்துர்

 நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோவிலில் 5004 திருவிளக்கு பூஜை நடந்தது.நாலுமாவடி பாதக்கரை சுவாமி திருக்கோவில்  மகாருத்ராபிஷேகம் மற்றும் கோவில் கொடைத்திருவிழாவை முன்னிட்டு அக் 2ம்தேதி காலை 7மணிக்கு ருத்திரபாராயணம் ஆரம்பமும், காலை 8மணிக்கு ஸ்ரீ அமிர்தவிநாயகர் சிறப்பு பூஜை, காலை 9மணிக்கு மஹா ருத்திரஹோமம் ஆரம்பம், புஷ்பாஞ்சலி பூஜை, பூர்ணா ஹீதி, காலை 9.30மணிக்கு சிறப்பு அர்ச்சனை, பகல் 12மணிக்கு வருஷாபிஷேகம், பகல் 1மணி சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனையும் நடந்தது. மாலை 6மணிக்கு உலக நன்மை வேண்டியும், நல்ல மழை பொழிய வேண்டியும் 5004பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஸ்ரீ பாதக்கரை சுவாமி திருக்கோயிவ் அன்னதான அறக்கட்டளை, பாதக்கரை சுவாமி வளர்நிலைச்சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து