எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 லட்சத்து 24 ஆயிரத்து 679 வாக்காளர்கள் உள்ளனர் என்று கலெக்டர் முனைவர் நடராஜன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்வதற்கு ஏதுவாக 2018-ஆம் ஆண்டு வரைவு வாக்காளர் பட்டியலினை கலெக்டர் முனைவர் நடராஜன் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 01.01.2018ம் தேதியினை தகுதிநாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்புசுருக்கத் திருத்தம்-2018 மேற்கொள்ளப்படவுள்ளது. அதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்;டத்தில் உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 5,61,868 ஆண் வாக்காளர்களும், 5,62,744 பெண் வாக்காளர்களும், 67 மூன்றாம் பாலின வாக்காளர்களும் ஆக மொத்தம் 11,24,679 வாக்காளர்கள் உள்ளனர். புகைப்பட வாக்காளர் துணைப்பட்டியல் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களில் அதாவது வருவாய் கோட்டாட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. முழுமையான புகைப்பட வாக்காளர் பட்டியல் வாக்குச்சாவடி அமைவிடங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. நகரப் பகுதிகளில் குடியிருப்போர் நலச் சங்கங்களுக்கும், ஊரகப் பகுதிகளில் கிராம சபைகளுக்கும் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமும் வாக்காளர் பட்டியலின் உரிய பாகத்தின் நகல் அளிக்கப்பட்டுள்ளது. இணையதள முகவரியிலும் பெயர்களைத் தேடிக் கண்டுபிடிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வாக்களார் பட்டியல் பெயரைச் சேர்ப்பதற்கு, இந்தியக் குடியினராய் இருத்தல் வேண்டும். 01.01.2018 அன்று 18 வயது நிரம்பியவராகவும் (அதாவது 31.12.1999 அன்றோ அதற்கு முன்போ பிறந்தவராய் இருத்தல் வேண்டும். பதிவு செய்யக் கோரும் பகுதியில் சாதாரணமாக வசிப்பவராகவும் இருத்தல் வேண்டும். வாக்காளர்; புகைப்பட அடையாள அட்டை வைத்திருப்பதால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க இயலாது. நீங்கள் குடியிருக்கும் பகுதியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் பதிவு பெற்றிருக்க வேண்டும்.
முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட (அதாவது உங்கள் பெயர் வேறெங்கும் பதிவு பெறாமலிருந்தால்) அல்லது ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு வசிப்பிடம் மாறியிருந்தால் - படிவம் 6-ம், வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் பெயர் சேர்க்கப்பட - படிவம் 6ஏம், ஒரு சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே வசிப்பிடம் மாறியிருந்தால் - படிவம் 8ஏம், பெயரை நீக்க - படிவம் 7-ம், பெயர், வயது, பாலினம், உறவுமுறை முதலிய பதிவுகளில் திருத்தம் அல்லது சரியான உருவப்படம் இடம் பெறச் செய்ய - படிவம் 8ம் சம்பந்தப்பட்ட நபர்கள் பூர்த்தி செய்து வழங்கப்பட வேண்டும். 03.10.2017 (இன்று) முதல் 31.10.2017 வரை படிவம் - 6,7,8 மற்றும் 8யு பெறப்படும்.
07.10.2017 மற்றும் 21.10.2017 ஆகிய இரு தினங்களில் அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராம சபைகள் நடத்தப்பட்டு இந்த வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்களுக்கு வாசித்து காண்பிக்கப்படும். மேலும் 08.10.2017 மற்றும் 22.10.2017 ஆகிய இரு தினங்களில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி படிவம் - 6, 7, 8 மற்றும் 8யு பெறப்படும். படிவங்கள் 6 8 ஏ , 8 ஆகியவற்றின் வலது மேல்பக்க மூலையில் மனுதாரரின் பாஸ்போர்ட் அளவு வண்ணப் புகைப்படம் ஒட்டப்பட ஏதுவாக ஒரு கட்டம் அச்சிடப்பட்டுள்ளது. வாக்காளரின் படம் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை தயாரிக்கவும் மனுதாரர் அளிக்கும் புகைப்படம் பயன்படுத்தப்படும்.
படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களிலிருந்து பெறலாம். நடநஉவழைளெ.வn.பழஎ.in என்ற இணைய தளத்திலிருந்தும் இலவசமாக படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த படிவங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் சமர்ப்பிக்கலாம். உரிய படிவத்தில் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட அமைவிடம் (பொதுவாக உங்கள் பகுதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடி), வாக்குச்சாவடி நிலை அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அதிகாரி அல்லது வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் அளிக்கலாம். றறற.நடநஉவழைளெ.வn.பழஎ.in என்ற இணைய தள முகவரியிலும் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
முதன் முறையாக விண்ணப்பிப்போரைத் (அதாவது 18-24 வயதிலுள்ள மனுதாரர்கள்) தவிர, ஏனைய மனுதாரர்கள் அனைவரும் அவர்களுடைய முந்தைய முகவரியையும், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணையும் படிவத்தில் குறிப்பிட வேண்டும். இருப்பிட மாற்றம் செய்யாமலிருந்தாலும் கூட, தற்போதைய முகவரியில் எத்தனை ஆண்டுகளாக தொடர்ந்து வசித்து வருவதையும், முன்னர் பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிக்க இயலவில்லை எனவும் (அல்லது) தற்போதைய வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது எனவும் குறிப்பிட வேண்டும்.
முதன் முறையாக பெயர் சேர்க்கப்பட விண்ணப்பிப்போரைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் வாக்காளர் புகைப்பட அட்டை வைத்திருப்பதாகவே கருதப்படும். ஒரு நபருக்கு ஒரு முறை வழங்கப்பட்ட வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, அந்நபர் ஒரு பகுதியிலிருந்து வேறொரு பகுதிக்கு வசிப்பிட மாற்றம் செய்தாலும் கூட, நாடு முழுவதிலும் செல்லுபடியாக தக்கதாகும். வாக்காளர் பட்டியலில் ஓரிடத்திற்கு மேல் தமது பெயரைப் பதிவு செய்ய முயல்கிற அல்லது தவறான தகவல்களைத் தருகிற எந்த ஒரு நபரும், 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 31-ன் விதித் துறைகளின் கீழ் குற்ற நடவடிக்கைக்கு உள்ளாக தக்கவராவர். வயது சான்றாக பிறப்பு சான்றிதழ் அல்லது பள்ளி சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட்டின் நகல் அளிக்கப்படலாம். வசிப்பிட சான்றாக பின்வருவனவற்றுள் ஒன்றின் நகலை அளிக்கலாம்.
வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6ஏ நேரில் அளிக்கப்படும் போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட்டின் தொடர்புடைய பக்கங்களின் ஒளிநகலையும் சேர்;த்து அளிக்க வேண்டும். வாக்காளர் பதிவு அதிகாரி மூல பாஸ்போர்ட்டினை ஒப்பிட்டு சரிபார்த்து அப்போதே திரும்பக் கொடுத்து விடுவார். எனவே, 6ஏ நேரில் அளிக்கப்படும் போது வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தில் மட்டுமே பெறப்படும். நிர்ணயிக்கப்பட்ட அமைவிடங்களில் பெறப்பட மாட்டாது. 6ஏ தபாலில் அனுப்பப்படும் போது பாஸ்போர்ட்டின் ஒளிநகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்களின் மீது வாக்காளர் பதிவு அதிகாரி ஆணை பிறப்பிப்பதற்கு முன், அதில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொள்வார். 03.10.2017 முதல் 31.10.2017 வரையுள்ள காலத்தில் பெறப்படும் அனைத்து மனுக்களின் மீதும் உரிய விசாரணை மேற்கொண்டு முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் 05.01.2018 அன்று வெளியிடப்படும். கோரிக்ககைள் மற்றும் மறுப்புரைகளின் பட்டியல் தலைமைத் தேர்தல் அதிகாரியின் வலைதளத்தில் வெளியிடப்படும். ஆட்சேபணை ஏதுமிருப்பின் அப்பட்டியலை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் பதிவு அதிகாரியிடம் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வ.முருகானந்தம், வருவாய் கோட்டாட்சியர்கள் (ராமநாதபுரம்) ரா.பேபி, (பரமக்குடி) அமிர்தலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை உள்பட அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்23 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 18 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்: 3-வது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
24 Apr 2024வாஷிங்டன், பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக ரஷியா, அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
காஷ்மீர் என்கவுண்ட்டர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயம்
24 Apr 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் காயமடைந்தார்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
லக்னோவுக்கு எதிராக தோல்வி: புள்ளி பட்டியலில் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ்
24 Apr 2024சென்னை:லக்னோவுக்கு எதிரான தோல்வியால் புள்ளி பட்டியலில் 5-ம் இடத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரிந்துள்ளது.
-
கேரளாவில் தேர்தலை புறக்கணிக்குமாறு மாவோயிஸ்டுகள் எச்சரிக்கை
24 Apr 2024திருவனந்தபுரம்:கேரள மாநிலத்தில் உள்ள 20 தொகுதிகளுக்கும் வரும் 26ம் தேதி (நாளை) ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
-
இலங்கையிலிருந்து மேலும் 5 மீனவர்கள் தாயகம் திரும்பினர்
24 Apr 2024கொழும்பு:எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 5 இந்திய மீனவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
-
ஜம்மு-காஷ்மீரில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024ஜம்மு:ஜம்மு காஷ்மீரில் நாளை 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
குரூப்-4 தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு
24 Apr 2024சென்னை:குரூப்-1, குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.