முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரி காந்தி நினைவு மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியி கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் பார்வையிட்டார்

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      கன்னியாகுமரி
Image Unavailable

கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பாக, தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து, பொதுமக்கள் அறிந்துகொண்டு, பயன்பெறும் வகையில் வைக்கப்பட்டிருந்த, சிறப்பு புகைப்படக்கண்காட்சியினை, கலெக்டர்                   சஜ்ஜன்சிங் ரா.சவான்  அவர்கள், மாநிலங்களவை உறுப்பினர்  அ.விஜயகுமார் முன்னிலையில், கன்னியாகுமரி, காந்தி நினைவு மண்டபத்தில் பார்வையிட்டார்.தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு துறையின் வாயிலாக அறிவித்து, செயல்படுத்திய பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து, புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.  குறிப்பாக,  பிறந்த குழந்தைகளுக்கு தேவைப்படும் 16 பொருட்கள் உள்ளடங்கிய தரமான அம்மா குழந்தைகள் நலபரிசு பெட்டகம், அம்மா மருந்தகம், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா குடிநீர், பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, இலவச மடிகனிணி, சீருடைகள், புத்தக பை, பெண் கல்வி உயர்த்துவதற்காக தாலிக்கு தங்கம், வயதானவர்களுக்கு மருத்துவ மற்றும் அன்றாட செலவினை மேற்கொள்ள உதவித்தொகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகாரணங்கள் போன்ற பல்வேறு திட்டத்தின் புகைப்படங்கள், இப்புகைப்படக் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது.இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அரசின் சாதனைகள் குறித்த புகைப்படங்களை, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிக ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.இந்நிகழ்ச்சியில், நாகர்கோவில் கோட்டாட்சியர்  இரா. ஜானகி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ப.காந்தி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள் (பொ))  மா. மாடசாமி சுந்தர்ராஜ், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர்  அருளரசு,  உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) சையத் முஹம்மத், ஞானசேகர்,  கனகராஜன்,  நாஞ்சில் சந்திரன்,  சகாயம்,                              சந்தையடி பாலகிருஷ்ணன்,  வின்ஸ்டன்,  தம்பிதங்கம்,  ரெஜிஸ்ராஜ் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து