முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஶ்ரீநகரில், தீவிரவாதிகள் தாக்குதல்: ஜெயிஸ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்பு

செவ்வாய்க்கிழமை, 3 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

ஶ்ரீநகர் : ஶ்ரீநகரில், எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு ஜெயிஸ் இ முகமது இயக்கம் பொறுப்பேற்று உள்ளது.

ஶ்ரீநகரிலுள்ள விமான நிலையம் அருகே உள்ள எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்  முகாமில், நேற்று அதிகாலை  திடீரென தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர் தாக்குதல் நடைபெற்றது. ராணுவத்தினரின் பதில் தாக்குதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும், ஶ்ரீநகர் விமானநிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  4 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஜெயிஸ் இ முகமது  இயக்கம் பொறுப்பேற்று உள்ளது. விமான ஊழியர்கள் மற்றும் பயணிகள், விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. தீவிரவாதிகள் தாக்குதலால் விமான நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீநகர் விமான நிலையத்திற்குள் பயணிகள் செல்ல அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து