எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,-ராமநாதபுரத்தில் மாவட்ட சமூகநலத்துறையின் சார்பில் உலக முதியோர் தினவிழா கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை மற்றும் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பாக, உலக முதியோர் தினவிழா கலெக்;டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:- சர்வதேச முதியோர் தினம் 1991 முதல் அக்டோபர் 1-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மூத்த குடிமக்களின் திறமைகளை உணர்ந்து சமுதாயத்திற்கான அவர்களின் பங்களிப்பினை உறுதி செய்தலே 2017 சர்வதேச முதியோர் தினத்தின் நோக்கமாகும். பெற்றோர்களையும் மற்றும் மூத்த குடிமக்களையும் பராமரித்தல் என்பது இந்திய குடும்ப வாழ்வியல் முறையின் ஒரு அங்கமாக தொன்று தொட்டு இருந்து வருகின்றது. வயதில் இளையவர்கள் மூத்த குடிமக்களை மதித்து அவர்களுடைய அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்க்கையினை நடத்துவதென்பது கூட்டுக் குடும்ப கலாச்சாரத்தின் ஆணி வேராக இருந்து வந்தது. ஆனால் இன்றைய நிலையில் பெற்றோர்களைப் கைவிடுதலும், தவிக்க விடுதலும் தற்போது சாதாரண நிகழ்வுகளாக உள்ளன. முதியோர்களை தங்கள் சொந்த இல்லங்களில் வைத்து பராமரிக்க செய்வது நமது கடமையாகும்.
மேலும் அரசமைப்பில் உறுதி செய்யப்பட்ட கைவிடப்பட்ட பெற்றோர்கள் மற்றும் முதியோர்கள் தங்களின் சாதாரண வாழ்க்கைக்கான செலவுகளுக்கு வாழ்க்கை பொருளுதவி கிடைப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கலைத் தீர்க்கவும், எளிய முறையில் வாழ்க்கைப் பொருளுதவி பெறவும் நம் மத்திய அரசு பெற்றோர் மற்றும் முதியோர் பராமரிப்பு மற்றும் நல்வாழ்வுச் சட்டம் 2007 மற்றும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு விதிகள் 2009 வகுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் தமது உரிமைகளைப் பெற மகன்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோரிடமிருந்து பராமரிப்புத் தொகை கோரலாம். இவர்கள் தவிர தனது சொத்தை அனுபவித்து கொண்டிருப்பவர்கள் மீது புகார் செய்யலாம்.
இதுகுறித்து புகார்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவசியமில்லை. இது பற்றிய புகார்களை முதற்கட்டமாக கோட்;டாட்சியர் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள தீர்;ப்பாயத்தில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டும். இச்சட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை விரைவாக முடிப்பதற்கென தீர்ப்பாயங்கள் உட்கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின் கீழ்அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயங்கள் நீதிமன்றத்திற்குள்ள அனைத்து அதிகாரங்களையும் பெற்றிருக்கின்றன. இச்சட்டத்தின் கீழ் மாவட்ட சமூகநல அலுவலர் சமரச அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித் தலைவர் இம் மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவராவார். புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்பதை நீங்கள் உணர வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 74925 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.ஆயிரம் வழங்கப்படுகின்றது. முதியோர் உதவித்தொகையாக மட்டும் 47425 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கௌரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின்படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வு காலத்தை மனதில் கொண்டு சேமிப்புகளை மேற்கொள்வதுடன், தங்களது குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் தங்களால் இயன்ற பங்களிப்பினை வழங்குதல் நலமளிக்கும். இவ்வாறு பேசினார். பின்பு, 20 முதியோர்களுக்கு ஓய்வூதிய ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும், 01.10.2017 அன்று நடைபெற்ற முதியோர் விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.
அதன்பின்பு, மூத்த குடிமக்களுக்கு தமிழ்ச்சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க துணைத்தலைவர், அவார்டு டிரஸ்ட் முதுகுளத்தூர், தர்மக்கரங்கள் பரமக்குடி மற்றும் சுரவா பார்த்திபனூர் ஆகிய நன்கொடையாளர்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முன்னதாக ராமநாதபுரம் ரோமன் சர்ச் முன்பாக மாவட்ட கலெக்டர் மூத்த குடிமக்கள் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பங்கேற்றார். இப்பேரணியில் 100க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள், கூட்டமைப்பின் உறுப்பினர்கள், இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூகநலத்துறையின் கீழ் மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவியுடன் செயல்படும் முதியோர் மற்றும் ஒருங்கிணைந்த இல்லங்களில் தங்கியுள்ள மூத்த குடிமக்கள் மற்றும் இல்லங்களின் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, மாவட்ட சமூகநல அலுவலர் சி.குணசேகரி, சமூக பாதுகாப்பு திட்;ட தனித்துணை ஆட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை,மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் எஸ்.சேசுராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பி.கிருஷ்ணவேணி, தமிழ்ச்சங்கம் மற்றும் வியாபாரிகள் சங்க துணைத் தலைவர் எம்.எஸ்.கருணாநிதி, மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு செயலர் நா.இராமகிருஷ்ணன் உள்பட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.