முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சங்கரன்கோவிலில் திருப்பூர் குமரன் பிறந்த தின விழா

வியாழக்கிழமை, 5 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

சங்கரன்கோவிலில் செங்குந்தர் முன்னேற்ற சங்கம், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட வீரர் திருப்பூர் குமரனின் 114வது பிறந்த தின விழா நேற்று நடைபெற்றது.  விழாவிற்கு தென்னிந்திய மகாஜன சங்க மாநில இளைஞரணி செயலாளர் மாரிமுத்து தலைமை வகித்தார்.  விழாவை முன்னிட்டு பஸ் நிலையம் அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருப்பூர் குமரனின் திருஉருவப்படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதில் அதிமுக (அம்மா) சார்பில் மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா, மாவட்ட அவைத்தலைவர் பொய்கை மாரியப்பன், பொருளாளர் பால்கண்ணன், நகர செயலாளர் சங்கரசுப்பிரமணியன், மாவட்ட மகளிரணி செயலாளர் அமுதா பாலசுப்பிரமணியன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் பாண்டியராஜன், மகாராஜன், துரைப்பாண்டியன்,  அதிமுக சார்பில் நகர செயலாளர் ஆறுமுகம், வேலுச்சாமி, திமுக சார்பில் நகர செயலாளர் சங்கரன், மாரியப்பன், தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் சோலை கனகராஜ், இந்து முன்னணி மேற்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகச்சாமி, செங்குந்த முன்னேற்ற சங்க தலைவர் சக்திவேல், செங்குந்த அபிவிருத்தி சங்க தலைவர் இராமசுப்பு, மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் தலைவர் சுப்பிரமணியன், திருமுருகன் சிறுவிசைத்தறியாளர் சங்க தலைவர் முத்துசங்கரநாராயணன், மதிமுக நகர செயலாளர் ஆறுமுகச்சாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக், ரோட்டரி சங்க தலைவர் சுப்பையா, அரிமா சங்க தலைவர் அய்யாத்துரை, நகர வர்த்தக சங்க தலைவர் முத்தையா, மற்றும் தொண்டு நிறுவன அமைப்புகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து