எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் சீரான போக்குவரத்து மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்க தீவிர போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தி.நகரில் 200 கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்கப்பட்டும், 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான புரசைவாக்கம், வேளச்சேரி, தாம்பரத்திலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியிலும், பொது மக்களை பாதுகாக்கும் பணியிலும் ஈடுபடுகின்றனர்.
இம்மாதம் 18ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக பொதுமக்கள் சென்னையில் அதிகளவில் கூடும் இடங்களான தி.நகர், புரசைவாக்கம், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம் போன்ற பகுதிகளில் சீரான போக்குவரத்திற்கும், திருட்டு சம்பவங்கள் தடுக்கும் பொருட்டும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.க.விசுவநாதன் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.அதன்பேரில், 13ந் தேதி முதல் 18ந் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து மாவட்ட துணை ஆணையர்கள் தலைமையில், மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில், தற்காலிக காவல் உதவி மையங்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டு, திருட்டுச் சம்பவங்கள் மற்றும் வேறு அசம்பாவிதங்கள் நடைபெறாவண்ணம் காவல் உதவி மையங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்களில் காவலர்கள் நியமிக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்வதற்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு போக்குவரத்து சீராக செல்லும் வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கூடுதல் ஆணையர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து அவர்களால் நேரடியாக கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தி.நகர்
பொருட்கள் வாங்க சென்னையிலேயே பொதுமக்கள் அதிகளவில் கூடும் தி.நகர், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருவில் காவல் துணை ஆணையர் தலைமையில் மொத்தம் 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மாம்பலம் காவல்நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் 20 போலீசார் கொண்ட க்ரைம் ஸ்பெஷல் டீம் ஏற்படுத்தப்பட்டு சாதாரண உடையில் காவலர்கள் தி.நகர், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெருவில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பேருந்து வழித்தடங்கள், தி.நகர் பேருந்து நிலையம், உஸ்மான் ரோடு, ரங்கநாதன் தெரு என அனைத்து பகுதிகளிலும் ஒரு பெண் ஆய்வாளர் தலைமையில் 20 ஆண்/பெண் காவலர்கள் என தனிக்குழு அமைக்கப்பட்டு சாதாரண உடையில் பிக்பாக்கெட் திருடர்கள் கண்காணிக்கப்படவுள்ளனர். தி.நகர் பகுதியில் 200 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டப்பாட்டு அறை மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளது. மேலும் மாம்பலம் ரெயில் நிலைய நுழைவு வாயில் ரங்கநாதன் தெரு, போத்தீஸ் அருகில் மற்றும் குமரன் ஸ்டோர்ஸ் என 3 இடங்களில் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு காண்காணிக்கப்படவுள்ளது. கண்காணிப்பு கோபுரத்தில் பணியிலிருக்கும் காவலர்கள் பைனாகுலர் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படவுள்ளது. மேலும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பேனர்கள், உஸ்மான்ரோடு, ரங்கநாதன் தெரு மற்றும் தி.நகரின் முக்கிய பகுதிகளில் பொருத்தப்படவுள்ளது.
உஸ்மான் ரோடு சந்திப்பு மற்றும் ரங்கநாதன் தெரு ரெயிலடி ஆகிய இடங்களி எல்இடி டிஸ்ப்ளே அமைக்கப்பட்டு, விழிப்புணர் வாசகங்கள் ஒளிபரப்பப்படவுள்ளது. குற்ற சம்பவங்களுக்கு வாய்ப்பு அளிக்காவண்ணம் பொதுமக்களை உஷார்படுத்தும் பொருட்டு ஒலிபெருக்கி மூலம் இந்த இடங்களில் பிரச்சாரம் செய்ய ஏற்பாட செய்யப்பட்டுள்ளது. மாம்பலம் ரெயில் நிலைய படிக்கட்டுகளின் வழியே ரங்கநாதன் தெருவிற்கும் அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு திரும்பவும் படிகளில் நடுவே தடுப்புகள் அமைத்து சிரமமின்றி நென்றுவர ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இதே போன்று ரங்கநாதன் தெருவின் நடுவில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் சிரமமின்றி செல்ல வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. உஸ்மான்ரோடு – ரங்கநாதன் தெரு சந்திப்பு, போத்தீஸ் சந்திப்பு, தி.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் பொதுமக்கள் சிரமமின்றி சாலையை கடப்பதற்கு கயிறுகள் பொருத்தப்படவுள்ளது. காவல் கட்டுப்பாட்டு அதை போத்தீஸ் சந்திப்பு அருகே நிறுவப்படவுள்ளது. காவல் உதவி மையம் ரங்கநாதன் தெரு, பாண்டிபஜார், வாணிமகால் மற்றும் வி.என்.சாலையில் அமைக்கப்படவுள்ளது.
புரசைவாக்கம்
புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் டவுட்டன் சந்திப்பு, வெல்கம் ஓட்டல் சந்திப்பு மற்றும் வெள்ளாளர் தெரு சந்திப்பு ஆகிய இடங்களில் காவல் துணை ஆணையர் தலைமையில் மொத்தம் 230 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படவுள்ளனர். மேலும் சரவணா ஸ்டோர்ஸ் அருகிலும், வெல்கம் ஓட்டல் சந்திப்பிலும், வெள்ளாளர் தெரு சந்திப்பிலும் உள்ள காவல் உதவி மையங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் காவலர்கள் அடங்கிய குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் இந்த இடங்களில் 3 தற்காலி கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, ஒலிபெருக்கி மூலம் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெருக்கடி இல்லாமல் செல்வதற்கான பாதைகள் குறித்தும், திருடர்களிடமிருந்து பணம், நகை மற்றும் உடைமைகளை பாதுகாக்கா முன்னெச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வு உண்டாக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வேள்சேரி
வேள்சேரியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 1 ஆய்வாளர், 2 உதவி ஆய்வார்கள் மற்றும் 50 காவலர்கள் பணி அமர்த்தப்பட்டு கண்காணிப்பு செய்யப்படவுள்ளது. மேலும் ரோந்து பணியும் அதிகரிக்கப்படவுள்ளது. இதர பகுதிகளில் செக்டார் ரோந்து அலுவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்படவுள்ளது. வேளச்சேரி தரமணி லிங்க சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் அருகே கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு காவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது. 100 அடி ரோடு தரமணி லிங்க் ரோடு, விஜிபி செல்வா நகர், புவனேஸ்வரி நகர், விஜய நகர் பேருந்து நிலையம் மற்றும் முக்கியமாக பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளது. தரமணி லிங்க்ரோடு, சரவணா ஸ்டோர்ஸ் கடையிலிருந்து வேளச்சேரி ரெயில் நிலையம் வரும் பாதசாரிகள் நடந்துசெல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டு விபத்து ஏற்படா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
தாம்பரம்
தாம்பரம் தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல தாம்பரம் சானிடோரியம் அண்ணா பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் சுழற்சி முறையில் காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். மேலும் ஜி.எஸ்.டி. ரோட்டில் சென்னைக்குள்ளே வரும் வாகனங்கள் மற்றும் வெளியே செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படா வண்ணம் சுழற்சி முறையில் காவலர்களை நியமித்து பொதுமக்களுக்கு போக்குவரத்தினால் பாதிப்பு ஏற்படாவண்ணம் பாதுகாப்பு பணியில் காவலர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர். குறிப்பாக சண்முக சாலை, தில்லை நகர் பகுதி, தாம்பரம் பேருந்து நிலையம் ஜி.எஸ்.டி. சாலை பகுதியில் பிக்கெட்டிங் போடப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படவுள்ளது.
வண்ணாரப்பேட்டை
முக்கிய வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் தீபாவளி வியாபாரத்தை முன்னிட்டு போக்குவரத்து தடை செய்தல், குறிப்பாக ஜி.ஏ.ரோடு, எம்.சி.ரோடு முழுவதும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை இருசக்கர வாகனம் உள்பட போக்குவரத்திற்கு தடை செய்யப்படவுள்ளது. மேலும் காவல் துணை ஆணையாளர் தலைமையில் 149 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். எம்.சி. சாலையில் அரிஹந்த் டெக்ஸ்டைல்ஸ், வீராஸ் டெக்ஸ்டைல்ஸ் முன்பும், ஜி.ஏ. சாலையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பும் 3 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் 6 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கப்படவுள்ளது. மேலும் எம்.சி. சாலை மற்றும் ஜி.ஏ. சாலையில் சாதாரண உடையில் காவலர்கள்/உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து ஏற்பாடு செய்யப்படவுள்ளது. மேலும் எச்.1 வண்ணாரப்பேட்டை, எச். 3 தண்டையார்பேட்டை மற்றும் என்.1 ராயபுரம் காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பூக்கடை
முக்கிய வணிக வளாகங்கள் ஆடைகள், நகைகள், பட்டாசு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் உள்ள பகுதிகளான என்.எஸ்.சி. போஸ் சாலையில் தீபாவளி வியாபாரத்தை முன்னிட்டு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 117 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். பிராட்வே பேருந்து நிலையம் வெளிவாயில், குறளகம், பந்தர் தெரு, என்.எஸ்.சி. போஸ் சாலை சந்திப்பு, என்.எஸ்.சி. போஸ் சாலை நாராயண முதலி தெரு சந்திப்பு மற்றும் என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்பன் தெரு சந்திப்பு ஆகிய 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வாங்கபடவுள்ளது.
03 புறக்காவல் நிலையங்கள் சி1, சி2 மற்றும் பி2 காவல்நிலையங்களில் நிறுவப்பட்டு பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவர்கள் உடமைகள் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. 02 தீயணைப்பு வாகனங்கள் என்.எஸ்.சி போஸ் சாலை டெலிபோன் எக்சேஞ்ச், பந்தர் தெரு அருகில் நிலைநிறுத்தப்பட்டவுள்ளன. கூடுதலாக தற்காலிக கட்டுப்பாட்டறை பந்தர் தெருவில் உள்ள புறக்காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டவுள்ளது. மேலும் சாதாரண உடையில் காவலர்கள்/ உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க உள்ளனர். மேலும் சி1, சி2, பி1, பி2 என்3 மற்றும் சி3 காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலகர்கள்குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தபடவுள்ளனர். மேலும் நகை வியாபாரிகள் சங்கத்தினர் வாயிலாக பல இடங்களில் சிசிடிவி கேமாராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
அண்ணாநகர்
கோயம்பேடு பேருந்து நிலையம், சி.எம்.பி.டி மதுரவாயல் மற்றும் திருமங்கலம் காவல் நிலையம் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்காக பேருந்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்துதல், பயணியர் உடைமைகள் பாதுகாப்பு உறுதி செய்தும், பயணியரை வரிசைப்படுத்தில் பேருந்தில் அமரச்செய்யவும் 16 செக்டார் பாதுகாப்பிற்காக, காவல் துணை ஆணையாளர் தலைமையில் 639 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். முக்கிய சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும் அதில் கண்காணிப்பு கேமாராக்கள் மூலம் கூட்டத்தை கண்காணித்தும் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கபடவுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் கே 10 கோயம்பேடு மற்றும் கே11 சிஎம்பிடி காவல் நிலையங்களின் சரகத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டவுள்ளன. சாதாரண உடையில் காவலர்கள்/ உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் கே10, கே11, டி4 மற்றும் வி5 காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
மாதவரம்
முக்கிய வணிக வளாகங்கள் ஆடைகள், நகைகள், பட்டாசு கடைகள் மற்றும் முக்கிய கடைகள் உள்ள பகுதிகளான செங்குன்றம் ஜி. என்.டி சாலையில் மாதவரம் மூலக்கடை சந்திப்பு, மணலி மார்க்கெட், மணலி புதுநகர், எண்ணூர் மற்றும் சாத்தாங்காடு மார்க்கெட் பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காவல் துணை ஆணையாளர் தலைமையில் 168 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டவுள்ளனர். ஒலிபெருக்கி மூலம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கபட்டவுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட உள்ளன. சாதாரண உடையில் காவலர்கள்/உதவி ஆய்வாளர்கள் குற்றவாளிகள் நடமாட்டத்தை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாதாவரம் காவல் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களின் பெட்ரோல் வாகனங்களில் அலுவலர்கள் குற்ற தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிக போக்குவரத்து கொண்ட சாலைகளான அண்ணா சாலை, சர்தார் வல்லபாய் படேல் ரோடு, துர்காபாய் தேஸ்முக் சாலை, சந்தோம் நெடுஞ்சாலை, பசுமைவழிச் சாலை, காமராஜர் சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை, கத்தீட்ரல் சாலை, எல்.பி. சாலை, ஆர்கே சாலை, சேமியர் சாலை ஈவிஆர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிரகாசம் சாலை, ஜிஎஸ்டி சாலை, ஓஎம்ஆர், ஈசிஆர், சிடிஎச் சாலை, டிஎச் ரோடு, ஆகிய இடங்களில் ஒலிபெருக்கி கொண்ட ரோந்து வாகனங்களும் இழுவை வாகனங்களையும் மேற்பார்வை செய்ய காவல் உதவி ஆணையாளர் தலைமையில் 127 காவலர்களை நியமித்து போக்குவரத்து சீராக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 6 hours ago |
பெப்பர் சிக்கன்6 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.
-
பாராளுமன்ற தேர்தலில் போட்டி அ.தி.மு.க., தி.மு.க. இடையேதான் : கோவையில் கனிமொழி பிரச்சாரம்
29 Mar 2024கோவை : போட்டி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான். பா.ஜ.க. பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதுதான் என தி.மு.க.
-
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி பேச்சு
29 Mar 2024சென்னை : இன்னும் ஒரு மாதம்தான் நரேந்திர மோடி பிரதமர்.
-
குன்றத்து முருகன் கோவிலில் நடந்த பங்குனி பெருவிழா தேரோட்டம் : அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்
29 Mar 2024மதுரை : திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று பங்குனி பெருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழா ஏப். 5-ல் துவக்கம்
29 Mar 2024திருமலை, திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஏப்ரல் 5-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
-
இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறோம் : ஐ.நா. செய்தி தொடர்பாளர் கருத்து
29 Mar 2024நியூயார்க் : இந்தியாவில் வாக்காளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என நம்புவதாக ஐ.நா. சபை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ்
29 Mar 2024சென்னை, சென்னையில் தேர்தல் பணி பயிற்சிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
-
ஆர்.ஜே.டி. 26, காங்கிரஸ் 9, இடதுசாரிக்கு 5 இடங்கள்: பீகாரில் இண்டியா கூட்டணி தொகுதிப் பங்கீடு நிறைவு
29 Mar 2024பாட்னா, பீகார் மாநிலத்தில் மக்களவைத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது.
-
ஏப். 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
29 Mar 2024சென்னை, ஏப்ரல் 2 மற்றும் 4-ம் தேதிகளில் தென் தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்: ராகுல் காந்தி டுவிட்டரில் வாக்குறுதி
29 Mar 2024புது டெல்லி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு பணிகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்
-
மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : கோவையில் பிரேமலதா குற்றச்சாட்டு
29 Mar 2024கோவை : மத்திய, மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கோவையில் நேற்று நடந்த பிரச்சாரத்தில் தே.மு.தி.க.
-
ரூ.1,800 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு நோட்டீஸ்: வருமானவரித்துறை அனுப்பியது
29 Mar 2024புது டெல்லி, 1993-94-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு கால கட்டத்துக்கான வரி மற்றும் அபராதமாக ரூ.
-
புனித வெள்ளி: தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு
29 Mar 2024சென்னை : புனித வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
-
கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் : மதுரையில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
29 Mar 2024மதுரை : கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும் பா.ஜ.க. தவறு செய்தால் நாங்கள் கேட்போம் என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட தெரிவித்தார்.