முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்ட அளவிலான போட்டிகளில் ஹில்டன் பள்ளி மாணவர்கள் சாதனை

வெள்ளிக்கிழமை, 6 அக்டோபர் 2017      திருநெல்வேலி
Image Unavailable

திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் தமிழக அரசு பாளையங்கோட்டை சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவில் பல போட்டிகளை நடத்தியது. இப்போட்டிகளில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி மாணவர்களும், பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்றனர். போட்டிகளை மூன்று பிரிவுகளாக பிரித்து நடத்தினர். வண்ணம் தீட்டும் போட்டி மூன்று நிலைகளில் முதலாம் பிரிவில் ஹில்டன் பள்ளி மாணவர்கள்  எஸ்.சாம் தெரிஸ் முதல் பரிசும், இரண்டாம் பிரிவில் வி.ஜெயதாரிணி இரண்டாம் பரிசும், மூன்றாம் பிரிவில் கே.சபிதா இரண்டாம் பரிசும் பெற்றனர். கட்டுரை போட்டியில் ஹில்டன் பள்ளி மாணவர் வி.பிரியா முதல்நிலையில் முதல் பரிசு பெற்றார். பேச்சுப் போட்டியில் ஹில்டன் பள்ளி மாணவர்கள் முதல் நிலையில் எஸ்.ஜெனோலின் ஷீலா முதல் பரிசையும், எஸ்.மகாலெட்சுமி இரண்டாம் பரிசையும் பெற்றனர். இரண்டாம் நிலையில் எம்.நித்தியாஸ்ரீ மூன்றாம் பரிசு பெற்றார். காந்தி ஜெயந்தியன்று வ.உ.சி.மைதானத்தில் போட்டிகளுக்கான பரிசுகள் வழ                ங்கப்பட்டது. விழாவில் மாவட்ட ஆட்சியர் உரை நிகழ்த்தினார். பரிசுகளை அமைச்சர்.ராஜலெட்சுமி  வழங்கினார்கள். பரிசு பெற்ற மாணவர்களை ஹில்டன் பள்ளி முதல்வர் ஆர்.ஜே.வி.பெல், துணை முதல்வர் கஸ்தூரி பெல், ஆசிரிய ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து