முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

பெர்லின்: ஜெர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியில் ஹம்பெர்க் நகரில் சேவியர் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனனர். பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் பல இடங்களில் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு சாரணலயங்கள் பல சேவியர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்லதால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.மீட்புப் பணிகள் விரைவாக நடந்து வருகிறது என்றும் மக்கள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்றும் ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து