முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் இருவர் கைது: 16பவுன் நகை,டூவீலர் பறிமுதல்

சனிக்கிழமை, 7 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

 திருமங்கலம்.- மதுரை மாவட்டம்,திருமங்கலம் நகர் காவல்நிலைய தனிப்படை போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இன்ஜினியரிங் கல்லூரி இரண்டாமாண்டு மாணவர் உட்பட கொள்ளையர்கள் இருவரை கைது செய்து அவர்களிடமிருந்து 16.25பவுன் தங்க நகைகளையும் வழிப்பறிக்கு பயன்படுத்திய அதிவேக டூவீலரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் டூவீலரில் அதிவேகமாக வந்து தனியே சென்றிடும் பெண்களிடம் தங்க நகையை பறித்துச் செல்லும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வந்தது.இதையடுத்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவின் பேரில் திருமங்கலம் நகர் காவல் நிலைய ஆய்வாளர் காந்தி தiமையில் எஸ்.ஐ.,இளங்கோவன் மற்றும் போலீசார் காளிராஜ்,பாண்டியஅரசன்,காளியப்பன்.ராஜா,ராஜ்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு வழிப்பறி கொள்ளையர்களை வலைவீசித் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் தனிப்படை போலீசார் கப்பலூர் ரிங்ரோடு பகுதியில் மாறுவேடத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது டூவீலரில் அதிவேகமாக வந்த இரு வாலிபர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது டூவீலரில் வந்த வாலிபர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்ததை தொடர்ந்து இருவரையும் திருமங்கலம் நகர் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது பிடிபட்ட வாலிபர்கள் திருநகர் ஜி.எஸ்.டி ரோட்டைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் ராம்குமார்(20) மற்றும் திருநகர் நெல்லையப்பபுரத்தைச் சேர்ந்த முருகன் மகன் முத்துப்பாண்டி(21)ஆகியோர் என்பதும்,இவர்கள் இருவரும் திருமங்கலம் நகரின் கக்கன்காலனி,கப்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தனியாக நடந்து சென்ற செல்வி,சாரதா,செண்பகமூர்த்தி ஆகிய பெண்களிடம் டூவீலரில் வந்து நகைகளை பறித்துச் சென்றதும் தெரியவந்தது.இதையடுத்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட வாலிபர்கள் இருவரையும் கைது செய்து தனிப்படை போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 16.25பவுன் தங்கநகைகளையும் வழிப்பறிக்கு பயன்படுத்திய அதிவேக டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்ட மதுரை திருநகரைச் சேர்ந்த வாலிபர் ராம்குமார்(20) தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.இ.,இரண்டாமாண்டு படித்து வரும் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட வழிப்பறி கொள்ளையர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திருமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டனர்.போலீசாருக்கு சவால்விடும் வகையில் தனியே செல்லும் பெண்களிடம் தங்க நகைகளை வழிப்பறி செய்து வந்த கொள்ளையர்களை கைது செய்து நகைகளை மீட்ட திருமங்கலம் நகர் காவல் ஆய்வாளர் காந்தி தலைமையிலான தனிப்படை எஸ்.ஐ.,இளங்கோவன் மற்றும் போலீசார் காளிராஜ்,பாண்டியஅரசன்,காளியப்பன்,ராஜா,ராஜ்குமார் ஆகியோரை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வெகுவாக பாராட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து