முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவூதி அரண்மனையில் துப்பாக்கிச் சூடு : 2 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

ஜெட்டா :  சவூதி அரேபியாவின் ஜெட்டா அரண்மனையில் பட்டப்பகலில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 ராணுவ வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சவூதியின் ஜெட்டாவில் மன்னரின் பாரம்பரிய அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையின் மேற்கு வாயிலில் மர்ம நபர் ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றார். அவரை பாதுகாவலர்கள் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 2 ராணுவ வீரர்கள் பலியாகினர். மேலும் 3 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். மற்ற ராணுவத்தினர் மர்ம நபரை சுட்டுக் கொன்றனர். இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் மன்சூர் அல் அம்ரி என தெரியவந்துள்ளது. அவருக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுட்கிறது.

இதையடுத்து சவூதியில் இருக்கும் தங்கள் நாட்டவரை பாதுகாப்பாக இருக்கும்படி அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து