முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடியில் ரேசன் பச்சரிசியை அரைத்து ஹைப்பர் மார்க்கெட்டுக்கு சப்ளை: ஒரு டன் பச்சரிசி மூட்டைகள் பறிமுதல்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடியில் ரேசன் அரிசியில் விலை உயர்ந்த மாவு பாக்கெட்டுகளாக போலீயாக தயாரித்த அரைவை மில்லில் பறக்கும் படை தாசில்தார் சந்திரன் விசாரனை நடத்தி வருகிறார்.தூத்துக்குடியில் ரேசன் கடைகளில் பச்சரிசி திருட்டுத்தனமாக வாங்கி அதனை மாவு பாக்கெட்டுகளாக விற்கப்பட்டு வருவதாக பறக்கும்படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி ஆரோக்கியபுரம் சேது பாதை ரோட்டில் உள்ள குணசேகரன் என்பவரது மாவு அரைக்கும் அரைவை மில்லில் பறக்கும் படை தாசில்தார் சந்திரன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு டன் எடை கொண்ட ரேசன் பச்சை அரிசியை பச்சரிசி மாவாக திரித்து பாக்கெட்களில் அடைத்து தரம் வாய்ந்த விலை உயர்ந்த மாவு பாக்கெட்டாக தயார் செய்து சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்டுகளுக்கு விற்று வந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த குடோனை கைப்பற்றி அதில் அரைக்க தயாராக இருந்த 5 மூடை பச்சரிசி மற்றும் 25 மூடை அரைத்த பச்சரிசி மாவு மற்றும் 500 கிராம் பாக்கட்டுகள் 350 ஆகியவற்றை கைப்பற்றி அரைவை மில் உரிமையாளர் குணசேகனிடம் பறக்கும் படை தாசில்தார் சந்திரன் விசாரணை நடத்தி வருகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து