முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மலையில் நடந்த மாநில சிறுமியர் கபடி போட்டி தருமபுரி அணி சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 8 அக்டோபர் 2017      திருவண்ணாமலை
Image Unavailable

 

திருவண்ணாமலையில் நடந்த 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி போட்டியில் தருமபுரி அணி 36 புள்ளிகள் பெற்று சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச் சென்றது.

கபடி போட்டி

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் மற்றும் தி.மலை மாவட்ட கபடி கழகம் இணைந்து நடத்தும் 29வது மாநில அளவிலான சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டரங்கில் 3 நாட்கள் நடக்கிறது. இதில் தமிழகம் முழுவதுமிருந்து 26 மாவட்டங்களை சேர்ந்த வீராங்ணைகள் கலந்து கொண்டு விளையாடினர். 3வது நாளான நேற்று இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் தருமபுரி அணியும் திண்டுக்கல் அணியும் கலந்து கொண்டன. இறுதியில் தருமபுரி அணி 36 புள்ளிகளை பெற்று வெற்றிபெற்றது. திண்டுக்கல் அணி 26 புள்ளிகள் பெற்று 2வது இடத்தை பிடித்தது. வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவுக்கு தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக சோலை எம்.ராஜா தலைமை தாங்க தி.மலை மாவட்ட கபடி கழக துணைத் தலைவர் ஏ.முனியன் அனைவரையும் வரவேற்றார். திருவண்ணாமலை மாவட்ட கபடி கழக தலைவர் வி.பவன்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார், 36 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்ற தருமபுரி அணிக்கு சாம்பியன்ஷிப் கோப்பையும் 2வது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு பரிசும் வழங்கி பாராட்டி கௌரவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழகம் பொதுச் செயலாளர் ஏ.சபியுல்லா துணைத் தலைவர் கே.பி.பாண்டியன், கூட்டுறவு துறை துணை பதிவாளர் இ.சரவணன், தமிழ்நாடு புரோ கபடி ஒருங்கிணைப்பாளர் சேகர், இந்தியன் பிளேயர் அர்ச்சனா அவார்டு கணேசன் மாவட்ட கபடி கழக இணை செயலாளர் எம்.ரமேஷ், மற்றும் கபடி கழக நிர்வாகிகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்கள் வீராங்கணைகள் கலந்து கொண்டனர். முடிவில் திருவண்ணாமலை மாவட்ட கபடி கழக செயலாளர் ஆர்.ஆனந்தன் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து