முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரண தண்டனை ஆயுளாக குறைப்பு - குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவு

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      இந்தியா
Image Unavailable

அகமதாபாத் : கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேரின் மரண தண்டனையை ஆயுளாக குறைத்து குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002, பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி விரைவு ரயில் கொளுத்தப்பட்டது. அதில் பயணித்த 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த ரயில் எரிப்பு சம்பவத்தை அடுத்து, குஜராத் முழுவதும் பயங்கர வன்முறை வெடித்தது.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் 31 பேரை குற்றவாளிகளாக அறிவித்தது. அவர்களில் 11 பேருக்கு மரண தண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. இந்நிலையில், விசாரணை நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நேற்று (அக்.9) குஜராத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.எஸ்.தவே, ஜிஆர்.உத்வானி, 11 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர். அதேவேளையில் ஏற்கெனவே 20 பேருக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். இதுதவிர சட்டம் ஒழுங்கை பேணத் தவறிய மாநில அரசும் ரயில்வே நிர்வாகமும் கோத்ரா சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து