எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் 10ஆயிரத்து 778 மாணவ-மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் பணியினை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளியில் 2016-17 ஆம் கல்வியாண்டில் பயின்ற 10,778 மாணவ, மாணவிகளுக்கு ரூ.16 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரத்து 220 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் பணியினை கலெக்டர் முனைவர் நடராஜன் முன்னிலையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவியர்களின் கல்வி வளர்ச்சியே நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு அடிப்படை என்பதை உணர்ந்து, கல்வித்துறையில் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து 14 வகையான மாணவர் நல கல்வி மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பொருளாதாரத்தில் உயர்வாக இருப்பவர்கள் மட்டுமே மடிக்கணினிகளை பயன்படுத்த முடியும் என்ற சூழலை மாற்றி ஏழை, எளியவர்களும் மடிக்கணினிகளைப் பயன்படுத்தி இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்பத்துறையில் ஏற்படும் நவீன யுக்திகளை கற்றறிந்து உலகளாவிய அறிவினைப் பெற்று பயன்பெற வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
மாணவ, மாணவியர்கள் மேலை நாடுகளுக்கு இணையான உலக தரம் வாய்ந்த கல்வியினை பெற்றிட வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 85 அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2016 -2017 ஆம் கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற மொத்தம் 10,778 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் இன்று வழங்கப்படுகின்றது. அதனடிப்படையில் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1688 மாணவ, மாணவியர்களுக்கும், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1043 மாணவ, மாணவியர்களுக்கும், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற 1447 மாணவ, மாணவியர்களுக்கும் ஆக மொத்தம் 4178 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6,26,28,220 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்குவதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
மாணவ, மாணவியர்களுக்கு மடிக்கணினிகள் மட்டுமல்லாது, சிரமமின்றி பள்ளிக்குச் சென்று வர விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா நோட்டுப் புத்தகங்கள், விலையில்லா புத்தகப்பை, சீருடை , காலணி, வண்ணப் பென்சில்லகள், விலையில்லா மிதிவண்டிகள், கல்வி ஊக்கத்தொகை, இலவச பேருந்துப் பயண அட்டைகள் உள்ளிட்ட 14 வகையான மாணவ, மாணவியர்களுக்கு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதன் மூலம் மாணவ, மாணவியர்களின் கல்வி கற்கும் ஆர்வம் ஊக்குவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியர்கள் விலையில்லா மடிக்கணினிகளை பயன்படுத்தி உலகத்தரத்திலான கல்வியினை பெற்று பயனடைய வழிவகை செய்கின்றது. தமிழ்நாடு அரசு மாணவ மாணவியர்களின் நலனில் அக்கறைக்கொண்டு செயல்படுத்தி வரும் பல்வேறு மாணவர் நல திட்டங்களை மாணவ மாணவியர்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெற வேண்டும். இவ்வாறு பேசினார். தொடர்ந்து உச்சிப்புளி அரசு மேல்நிலைப்பள்ளி, ராமேஸ்வரம் எஸ்.வி.ஏ (ம) மேல்நிலைப்பள்ளி மற்றும் திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மேல்நிலைப்பள்ளிகளுக்கு அமைச்சர் டாக்டர்.எம்.மணிகண்டன் நேரடியாகச் சென்று விலையில்லா மடிக்கணினிகளை பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பி.ஜெயஜோதி, ராம்கோ தலைவர் செ.முருகேசன், மாவட்ட கல்வி அலுவலர் கோ.முத்துசாமி மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் உள்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.