முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கள்ளழகர் பெருமாளுக்கு வர்ணக் குடை சாத்தும் விழா

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

அழகர்கோவில், அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் பெருமாளுக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக மேளதாளம் முழங்க மதுரை நவநீதகண்ணன் பஜனைக் கூடம் சார்பில் வர்ணக்குடை எடுத்து வந்தனர். தொடர்ந்து கோவிலில் உள்ள ஆண்டாள் சன்னதி முன்பாக கருட வாகனத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் நு£புரகங்கை தீர்த்தம், துளசிமாலை உள்ளிட்ட மாலைகளால் சுவாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் தீபாராதனைகள் நடந்தது. தொடர்ந்து மதுரையிலிருந்து கொண்டு வரப்பட்ட வர்ணக்குடை பெருமாளுக்கு சாத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக இந்த வர்ணக்குடைக்கு வழி நெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது தக்கார் வெங்கடாசலம் ஆலோசனையில் பேரில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டு கோவிலுக்கு குடை எடுத்து வந்த பக்தர்களை வரவேற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து