எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், “காச நோய் இல்லாத சென்னை” திட்டத்தினை துவக்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் கட்டுபாட்டுத்திட்டம் செயல்பட்டு வருகிறது. காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி “காச நோய் இல்லாத சென்னை”யை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, USAID மற்றும் Stop TB Partnership என்னும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நான்கு கட்ட நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1. முதல் கட்டமாக, காசநோய் உள்ளதை துரிதமாக கண்டறிதல்.
2. அவ்வாறு அறிந்தபின் இரண்டாம் கட்டமாக, அந்நோயாளிகளுக்கு 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் சிகிச்சை அளித்து குணமடையும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் ஏற்பாடு செய்தல்.
3. மூன்றாவது கட்டமாக, காசநோய் எளிதில், அதிகமாக தாக்கக்கூடிய குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று, அவர்களை பரிசோதனை செய்து, தேவை இருப்பின் அவர்களுக்கு ஊடுகதிர் மற்றும் சளிப்பரிசோதனை செய்தல். இப்பணிக்கென 7 நடமாடும் ஊர்திகள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
4. மேலும், நான்காம் கட்டமாக, காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதைக்கண்டு பயம் கொள்ளாமல், நோயாளிகளை ஒதுக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, காசநோய் இல்லாத சென்னையை உருவாக்கும் குறிக்கோளை அடைய பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை அனைத்து தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் தோராயமாக 600 தனியார் மருத்துவமனைகள், 2000 தனியார் ஆய்வகக் கூடங்கள், 2000 மருந்தகங்கள் மற்றும் 12,000 மருத்துவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காசநோயாளிகளை குறித்து தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் CBNAAT (Gene Xpert) பரிசோதனை தனியாரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் கொண்டு சேர்க்கவும், REACH அமைப்பு இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் காசநோய் குறித்த தற்போதைய நிலை, மேலும் மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்திய பிறகு உள்ள நிலை, பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு செய்ய இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்த நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி வழங்கப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 வருடங்களுக்கு ரூ.26 கோடி மானியம் USAID நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக 10 CBNAAT கருவிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இக்கருவியின் விலை ரூ.15 இலட்சமாகும். 10 கருவிகள் ரூ.1.50 கோடி மானியத்தில் Stop TB Partnership வழங்கியுள்ளது. இதற்கு தேவையான காட்ரேஜ் ரூ.4.5 கோடி மானியத்தில் வழங்கியுள்ளது. தனியார் மையத்தில் இந்தப் பரிசோதனை கட்டணம் ரூ.3000 ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தப் பரிசோதனை அரசு மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக செய்து தரப்படும்.
இந்தக் கருவி தற்போதுள்ள நுண்ணோக்கி மூலம் கண்டறிவதை விடவும் பல மடங்கு துல்லியமாக டிபி கிருமிகளை 2 மணி நேரத்தில் கண்டறியும். மேலும், இது தீவிரமான காசநோயான எம்.டி.ஆர்.டிபி யையும் கண்டறியும். இது ஒரே சமயத்தில் நான்கு நபர்களின் மாதிரியை பரிசோதனை செய்யும். இதனால் நாள் ஒன்றுக்கு 10 கருவிகளின் மூலம் 120 நபர்களுக்கு பரிசோதனை செய்யலாம். நுண்ணோக்கியானது சளி மாதிரியில் 10,000 டிபி கிருமிகள் இருந்தால் மட்டுமே கண்டறியும்.
மேலும், இது ஆய்வக நுட்புநரின் திறமையை சார்ந்ததாகும். ஆனால், CBNAAT கருவியோ 100 டிபி கிருமிகள் இருந்தாலே கண்டறியும். மேலும், இது கணினி சார்ந்ததாகும். அதனால் தற்போது மாதத்திற்கு 430 நோயாளிகள் கண்டுபிடிக்கும் நிலையில் இந்த கருவி மூலம் 650 நோயாளிகள் கண்டறியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சளி மாதிரி மட்டுமல்லாது, ரத்தம், மலம், சிறுநீர் தவிர்த்து, அனைத்து உடற் திரவங்களின் மாதிரிகளிலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் டிபி நோய்தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை துவங்கப்படும். துரிதமாக கண்டறிவதால் டிபி நோய் சமூகத்தில் பரவுவது குறையும். இவ்வகையான நடவடிக்கைகளின் மூலம் “காசநோய் இல்லாத சென்னை” உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை வாழ்மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மத்திய சுகாதார ஆராய்ச்சி துறையின் செயலாளர் மற்றும் Indian Council of Medical Research, Director General டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில், CBNAATமருத்துவ கருவியை வழங்கிட அதனை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அஹமது, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் மாநில காசநோய் அலுவலர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே.செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி6 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 5 hours ago |
ரவா பர்பி1 week 7 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்