எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், “காச நோய் இல்லாத சென்னை” திட்டத்தினை துவக்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் கட்டுபாட்டுத்திட்டம் செயல்பட்டு வருகிறது. காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி “காச நோய் இல்லாத சென்னை”யை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, USAID மற்றும் Stop TB Partnership என்னும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நான்கு கட்ட நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1. முதல் கட்டமாக, காசநோய் உள்ளதை துரிதமாக கண்டறிதல்.
2. அவ்வாறு அறிந்தபின் இரண்டாம் கட்டமாக, அந்நோயாளிகளுக்கு 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் சிகிச்சை அளித்து குணமடையும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் ஏற்பாடு செய்தல்.
3. மூன்றாவது கட்டமாக, காசநோய் எளிதில், அதிகமாக தாக்கக்கூடிய குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று, அவர்களை பரிசோதனை செய்து, தேவை இருப்பின் அவர்களுக்கு ஊடுகதிர் மற்றும் சளிப்பரிசோதனை செய்தல். இப்பணிக்கென 7 நடமாடும் ஊர்திகள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
4. மேலும், நான்காம் கட்டமாக, காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதைக்கண்டு பயம் கொள்ளாமல், நோயாளிகளை ஒதுக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, காசநோய் இல்லாத சென்னையை உருவாக்கும் குறிக்கோளை அடைய பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை அனைத்து தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் தோராயமாக 600 தனியார் மருத்துவமனைகள், 2000 தனியார் ஆய்வகக் கூடங்கள், 2000 மருந்தகங்கள் மற்றும் 12,000 மருத்துவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காசநோயாளிகளை குறித்து தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் CBNAAT (Gene Xpert) பரிசோதனை தனியாரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் கொண்டு சேர்க்கவும், REACH அமைப்பு இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் காசநோய் குறித்த தற்போதைய நிலை, மேலும் மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்திய பிறகு உள்ள நிலை, பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு செய்ய இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்த நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி வழங்கப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 வருடங்களுக்கு ரூ.26 கோடி மானியம் USAID நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக 10 CBNAAT கருவிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இக்கருவியின் விலை ரூ.15 இலட்சமாகும். 10 கருவிகள் ரூ.1.50 கோடி மானியத்தில் Stop TB Partnership வழங்கியுள்ளது. இதற்கு தேவையான காட்ரேஜ் ரூ.4.5 கோடி மானியத்தில் வழங்கியுள்ளது. தனியார் மையத்தில் இந்தப் பரிசோதனை கட்டணம் ரூ.3000 ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தப் பரிசோதனை அரசு மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக செய்து தரப்படும்.
இந்தக் கருவி தற்போதுள்ள நுண்ணோக்கி மூலம் கண்டறிவதை விடவும் பல மடங்கு துல்லியமாக டிபி கிருமிகளை 2 மணி நேரத்தில் கண்டறியும். மேலும், இது தீவிரமான காசநோயான எம்.டி.ஆர்.டிபி யையும் கண்டறியும். இது ஒரே சமயத்தில் நான்கு நபர்களின் மாதிரியை பரிசோதனை செய்யும். இதனால் நாள் ஒன்றுக்கு 10 கருவிகளின் மூலம் 120 நபர்களுக்கு பரிசோதனை செய்யலாம். நுண்ணோக்கியானது சளி மாதிரியில் 10,000 டிபி கிருமிகள் இருந்தால் மட்டுமே கண்டறியும்.
மேலும், இது ஆய்வக நுட்புநரின் திறமையை சார்ந்ததாகும். ஆனால், CBNAAT கருவியோ 100 டிபி கிருமிகள் இருந்தாலே கண்டறியும். மேலும், இது கணினி சார்ந்ததாகும். அதனால் தற்போது மாதத்திற்கு 430 நோயாளிகள் கண்டுபிடிக்கும் நிலையில் இந்த கருவி மூலம் 650 நோயாளிகள் கண்டறியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சளி மாதிரி மட்டுமல்லாது, ரத்தம், மலம், சிறுநீர் தவிர்த்து, அனைத்து உடற் திரவங்களின் மாதிரிகளிலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் டிபி நோய்தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை துவங்கப்படும். துரிதமாக கண்டறிவதால் டிபி நோய் சமூகத்தில் பரவுவது குறையும். இவ்வகையான நடவடிக்கைகளின் மூலம் “காசநோய் இல்லாத சென்னை” உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை வாழ்மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மத்திய சுகாதார ஆராய்ச்சி துறையின் செயலாளர் மற்றும் Indian Council of Medical Research, Director General டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில், CBNAATமருத்துவ கருவியை வழங்கிட அதனை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அஹமது, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் மாநில காசநோய் அலுவலர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே.செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.