எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், “காச நோய் இல்லாத சென்னை” திட்டத்தினை துவக்கி வைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காச நோய் கட்டுபாட்டுத்திட்டம் செயல்பட்டு வருகிறது. காசநோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி “காச நோய் இல்லாத சென்னை”யை உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, USAID மற்றும் Stop TB Partnership என்னும் சர்வதேச நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெருநகரங்களில் முதல் முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் நான்கு கட்ட நடவடிக்கைகள் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
1. முதல் கட்டமாக, காசநோய் உள்ளதை துரிதமாக கண்டறிதல்.
2. அவ்வாறு அறிந்தபின் இரண்டாம் கட்டமாக, அந்நோயாளிகளுக்கு 6 மாதங்கள் அல்லது 8 மாதங்கள் சிகிச்சை அளித்து குணமடையும் வரை அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் ஊட்டச்சத்துள்ள உணவுக்கும் ஏற்பாடு செய்தல்.
3. மூன்றாவது கட்டமாக, காசநோய் எளிதில், அதிகமாக தாக்கக்கூடிய குடிசைவாழ் பகுதி மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று, அவர்களை பரிசோதனை செய்து, தேவை இருப்பின் அவர்களுக்கு ஊடுகதிர் மற்றும் சளிப்பரிசோதனை செய்தல். இப்பணிக்கென 7 நடமாடும் ஊர்திகள் வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
4. மேலும், நான்காம் கட்டமாக, காசநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தி, அதைக்கண்டு பயம் கொள்ளாமல், நோயாளிகளை ஒதுக்காமல் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, காசநோய் இல்லாத சென்னையை உருவாக்கும் குறிக்கோளை அடைய பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த நடவடிக்கைகளை அனைத்து தனியார் மருத்துவமனைகளில் செயல்படுத்த REACH என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் பெருநகர சென்னை மாநகராட்சி ஒப்பந்தம் செய்துள்ளது. சென்னையில் தோராயமாக 600 தனியார் மருத்துவமனைகள், 2000 தனியார் ஆய்வகக் கூடங்கள், 2000 மருந்தகங்கள் மற்றும் 12,000 மருத்துவர்களும் உள்ளனர். இவர்கள் அனைவரும் காசநோயாளிகளை குறித்து தமிழ்நாடு அரசிடம் தெரிவிக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக செய்யப்படும் CBNAAT (Gene Xpert) பரிசோதனை தனியாரில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் கொண்டு சேர்க்கவும், REACH அமைப்பு இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது.
தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனமானது பெருநகர சென்னை மாநகராட்சியில் காசநோய் குறித்த தற்போதைய நிலை, மேலும் மேற்கூறிய நடவடிக்கைகள் செயல்படுத்திய பிறகு உள்ள நிலை, பற்றிய ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு செய்ய இந்த ஒப்பந்தம் மூலம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் இந்த நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி வழங்கப்படவுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் 4 வருடங்களுக்கு ரூ.26 கோடி மானியம் USAID நிறுவனம் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இதன் முதற்கட்டமாக 10 CBNAAT கருவிகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கவுள்ளது. இக்கருவியின் விலை ரூ.15 இலட்சமாகும். 10 கருவிகள் ரூ.1.50 கோடி மானியத்தில் Stop TB Partnership வழங்கியுள்ளது. இதற்கு தேவையான காட்ரேஜ் ரூ.4.5 கோடி மானியத்தில் வழங்கியுள்ளது. தனியார் மையத்தில் இந்தப் பரிசோதனை கட்டணம் ரூ.3000 ஆகும். பெருநகர சென்னை மாநகராட்சியில் இந்தப் பரிசோதனை அரசு மட்டுமன்றி தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கும் இலவசமாக செய்து தரப்படும்.
இந்தக் கருவி தற்போதுள்ள நுண்ணோக்கி மூலம் கண்டறிவதை விடவும் பல மடங்கு துல்லியமாக டிபி கிருமிகளை 2 மணி நேரத்தில் கண்டறியும். மேலும், இது தீவிரமான காசநோயான எம்.டி.ஆர்.டிபி யையும் கண்டறியும். இது ஒரே சமயத்தில் நான்கு நபர்களின் மாதிரியை பரிசோதனை செய்யும். இதனால் நாள் ஒன்றுக்கு 10 கருவிகளின் மூலம் 120 நபர்களுக்கு பரிசோதனை செய்யலாம். நுண்ணோக்கியானது சளி மாதிரியில் 10,000 டிபி கிருமிகள் இருந்தால் மட்டுமே கண்டறியும்.
மேலும், இது ஆய்வக நுட்புநரின் திறமையை சார்ந்ததாகும். ஆனால், CBNAAT கருவியோ 100 டிபி கிருமிகள் இருந்தாலே கண்டறியும். மேலும், இது கணினி சார்ந்ததாகும். அதனால் தற்போது மாதத்திற்கு 430 நோயாளிகள் கண்டுபிடிக்கும் நிலையில் இந்த கருவி மூலம் 650 நோயாளிகள் கண்டறியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சளி மாதிரி மட்டுமல்லாது, ரத்தம், மலம், சிறுநீர் தவிர்த்து, அனைத்து உடற் திரவங்களின் மாதிரிகளிலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். இதன் மூலம் டிபி நோய்தாக்கம் உள்ளவர்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை துவங்கப்படும். துரிதமாக கண்டறிவதால் டிபி நோய் சமூகத்தில் பரவுவது குறையும். இவ்வகையான நடவடிக்கைகளின் மூலம் “காசநோய் இல்லாத சென்னை” உருவாக்க பெருநகர சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் சென்னை வாழ்மக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், மத்திய சுகாதார ஆராய்ச்சி துறையின் செயலாளர் மற்றும் Indian Council of Medical Research, Director General டாக்டர் சௌம்யா சுவாமிநாதன் அவர்கள் முன்னிலையில், CBNAATமருத்துவ கருவியை வழங்கிட அதனை, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், மாநில நலவாழ்வு குழும இயக்குநர் டாக்டர் டேரஸ் அஹமது, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குநர் மற்றும் மாநில காசநோய் அலுவலர் (முழு கூடுதல் பொறுப்பு) டாக்டர் கே.செந்தில்ராஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
பறவைக் காய்ச்சல், அம்மை நோய் பாதிப்புகள்: அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு
23 Apr 2024சென்னை, கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார