முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி வாய்க்காலில் இன்று முதல் தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, மேட்டூர் அணையில் இருந்து புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக இன்று முதல் தண்ணீர் திறந்து விட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்கள் மூலம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடும்படி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்ட வேளாண் பெருமக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, புள்ளம்பாடி மற்றும் புதிய கட்டளை மேட்டுக் கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக இன்று 11.10.2017 முதல் தண்ணீர் திறந்து விட ஆணையிட்டுள்ளேன். இதனால், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் உள்ள 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து