முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைமறைவான நடிகர் சந்தானம் முன்ஜாமீன் கோரி கோர்ட்டில் மனுத் தாக்கல்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      சினிமா
Image Unavailable

சென்னை : ஒப்பந்ததாரரை தாக்கிய வழக்கில் முன் ஜாமீன் கோரி நடிகர் சந்தானம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருக்கிறார்.

திருமண மண்டபம் கட்டுவதற்காக கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் சண்முகசுந்தரத்திடம் ரூ 3 கோடி முன்பணம் கொடுத்திருந்தாராம் நடிகர் சந்தானம். ஆனால் திட்டமிட்டபடி சண்முகசுந்தரம் திருமண மண்டபத்தை கட்டிக் கொடுக்கவில்லை என்பது சந்தானம் தரப்பின் புகார். இது தொடர்பாக சண்முகசுந்தரத்துடன் சந்தானம் நேரில் பேசியிருக்கிறார். அப்போது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் சண்முகசுந்தரத்தின் வழக்கறிஞர் பிரேம் ஆனந்துக்கு மூக்கு உடைந்தது. பிரேம் ஆனந்த் பாஜக பிரமுகர் என்பதால் அக்கட்சி தொண்டர்கள் வளவரசவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது தொடர்பாக இருதரப்பு மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து நடிகர் சந்தானம் திடீரென தலைமறைவானார்.

இதனிடையே தமக்கு முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சந்தானம் மனுத் தாக்கல் செய்துள்ளார். அவரது மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து