முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வத்தலக்குண்டுவில் மனிதநேய மக்கள் மாநில தலைவர் ஜவஹ¤ருல்லா புதிய கட்சி அலுவலகம் திறந்து வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 10 அக்டோபர் 2017      திண்டுக்கல்
Image Unavailable

வத்தலக்குண்டு- வத்தலக்குண்டுவில்  மனிதநேய மக்கள் மாநில தலைவர் ஜவஹ¤ருல்லா புதிய கட்சி அலுவலகம் திறந்து வைத்தார் .
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு தமுமுக நகர செயலாளர் இந்தியாஸ்ஹபீப் தலைமை வகித்தார். தமுமக மாவட்ட நிர்வாகிகள் நஜிபுர்ரகுமான்,  நைனார்முகமது,  அன்சர்மைதீன், சையதுமூஸா, மமக நகர செயலாளர் அலாவூதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுமக நகர தலைவர்  சேக்தாவூத் வரவேற்றார். அதில் கலந்து கொண்ட ஜவஹ¤ருல்லா  நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
பேட்டியின் போது மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் ஜெய்னுல்ஆபுதீன், தலைமை கழக பேச்சாளர் பழனிபாரூக் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக பெரியபள்ளிவாசல் அருகாமை, கடைவீதி, பஸ்நிலையம் முன்பு உள்பட பல இடங்களில் கட்சி கொடி ஏற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து