முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கின்னஸ் சாதனை புரிந்த மாணவருக்கு அமைச்சர் செல்லூர்.கே.ராஜூ பாராட்டு

புதன்கிழமை, 11 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.- மதுரை கருமாத்தூர் அருள்ஆனந்தர் கல்லூரியில் முதுகலை இயற்பியல் துறையில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் விக்னேஷ்குமார் சைக்கிளை கைப்பிடிக்காமல் நீண்ட தூரம் ஓட்டி (122 கி.மீ தூரம்) உலக சாதனை படைத்து கின்னசில் இடம் பிடித்ததையொட்டி, சான்றிதழ் வழங்கும் விழா  கூட்டுறவுத்துறை அமைச்சர்  செல்லூர்.கே.ராஜு  தலைமையில் நடைபெற்றது.
   இவ்விழாவில்   கூட்டுறவுத்துறை அமைச்சர்   சாதனை படைத்த மாணவருக்கு சான்றிதழை வழங்கி தெரிவித்ததாவது:
   முடங்கி கிடந்ததால் சிலந்தி கூட சிறைபிடிக்கும்.  முடிந்தவனுக்கு இமயம் கூட எட்டும் தூரம் தான்.  கிராமப்புறத்தை சேர்ந்த மாணவர் விக்னேஷ் தொடர்ந்து முயற்சி செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.  இவரைப் போல் ஒவ்வொரு மாணவனும் முயற்சி செய்தால் உங்களால் முடியாதது ஒன்றுமில்லை.  எனவே மாணவர்களாகிய நீங்கள் விடாமுயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கேற்ப தங்கள் துறையில் தொடர் முயற்சி செய்து வெற்றியடைய வேண்டும் என தெரிவித்தார்.
   இந்நிகழ்ச்சியில் ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலைராஜா, கல்லூரி அதிபர் குழந்தைசாமி, செயலாளர் மணிவளன், கல்லூரி முதல்வர் பேசில் சேவியர், துணை முதல்வர் ஜோசப் செல்வராஜ் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து