முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவுக்கு போர் மூலம் பதிலடி கொடுப்போம்: வடகொரியா மிரட்டல்

வியாழக்கிழமை, 12 அக்டோபர் 2017      உலகம்
Image Unavailable

சியோல்: வடகொரியா பகுதிகளில் அமெரிக்க ராணுவ விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டதை தொடர்ந்து அமெரிக்காவுக்கு போர் மூலம் பதிலடி கொடுப்போம் என வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.

அமெரிக்காவை தாக்குவதற்கு தயாராகி வருவதாக வடகொரியா ஏற்கனவே அறிவித்தது. இதனால் கோபம் அடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐ.நா. சபையில் பேசும்போது, வடகொரியாவை கடுமையாக எச்சரித்தார். அந்த நாட்டையே அழித்து விடுவோம் என்று கூறினார். இந்த நிலையில் அமெரிக்கா தற்போது கொரிய தீபகற்ப பகுதியில் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க ராணுவ விமானங்கள் வடகொரியாவை ஒட்டி உள்ள பகுதிகளில் பறந்து சென்று ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன.

இது, வடகொரியாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்பந்தமாக வடகொரிய வெளியுறவு மந்திரி ரியாங்கோ கூறியதாவது:-
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஏற்கனவே வடகொரியாவை கடுமையாக மிரட்டி உள்ளார். நாங்கள் வார்த்தைக்கு வார்த்தை அவருக்கு பதில் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் எங்கள் பதிலடியை போர் மூலம் அவர்களுக்கு காட்டுவோம். அதற்கு தயாராகி விட்டோம். டொனால்டு டிரம்ப் மனநிலை பாதித்தவர் போல் செயல்படுகிறார். இதனால் தான் எங்களை மிரட்டுவதற்காக ஒத்திகை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். நாங்கள் ஒருபோதும் அமெரிக்காவை விட மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து