முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மாநகராட்சி பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 13 அக்டோபர் 2017      மதுரை
Image Unavailable

மதுரை.-மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2  கற்பக நகர், கோ.புதூர், மண்டலம் எண்.1 விராட்டிபத்து இருளாண்டி தேவர் காலனி ஆகிய பகுதிகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்,  மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்.   ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு வீட்டுவசதி நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அரசு செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ்,    ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 கற்பக நகர் பகுதியில் டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்து வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டார். வீட்டின் கழிவுநீரினை காலியிடத்தில் விட்ட வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார். அங்குள்ள மழைநீர் வடிகாலினை சுத்தம் செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். காலியாக உள்ள இடங்களை சுத்தம் செய்யாத இடத்தின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்  வழங்குமாறு கூறினார். அதனைத் தொடர்ந்து கோ.புதூர் சந்தன மாரியம்மன் கோவில் தெருவில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பிடித்து வைத்துள்ள குடிநீரில் டெங்கு கொசு புழு உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு குடிநீரினை மூடி கொசு புகாத வண்ணம் பாதுகாப்பாக வைக்குமாறு கூறினார். அப்பகுதியில்; சாலையில் சென்ற கழிவுநீரினை உடனடியாக அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். மேலும் ராமவர்மா நகர் 1வது தெருவில் மழைநீர் தேங்கியுள்ளதை பார்வையிட்டு உடனடியாக மழைநீரினை அப்புறப்படுத்துமாறும் எதிர்காலத்தில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.  புதூர் மார்க்கெட்டில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள மீன்கடைகளில் தேக்கி வைத்துள்ள தண்ணீரினை உடனடியாக கொட்டி அப்புறப்படுத்துமாறும், கொசு புழு உற்பத்தியாகும் வகையில் தண்ணீரை தேக்கி வைத்த காரணத்தினால் அக்கடைக்கு அபராதம் விதிக்குமாறும் உத்தரவிட்டார். மேலும் புதூரில் உள்ள நம்ம டாய்லெட்டினை ஆய்வு மேற்கொண்டு சுத்தமாக பராமரிக்குமாறு கூறினார்.
அதனைத் தொடர்ந்து மண்டலம் எண்.1 விராட்டிபத்து இருளாண்டி தேவர் காலனி பகுதியில் டெங்கு தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். மேலும் வீடு வீடாக அபேட் மருந்து தெளிக்கும் பணிகளை பார்வையிட்டார். சாலைகளில் குப்பைகளை தேங்க விடாமல் தினந்தோறும் உடனுக்குடன் அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார். பொதுமக்கள் டெங்கு தங்கள் வீடுகளையும், வீடுகளை சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ளுமாறும், டெங்கு ஒழிப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருமாறும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்   கொ.வீர ராகவ ராவ்,  மாநகராட்சி ஆணையாளர் மரு.அனீஷ் சேகர், இ.ஆ.ப., கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) எஸ்.பி.அம்ரித்,   மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.குணாளன், நகர்நல அலுவலர் சதிஷ் ராகவன், உதவி நகர்நல அலுவலர் பார்த்திபன், வருவாய் கோட்டாட்சியர் கார்த்திகேயன், உதவி ஆணையாளர்கள் அரசு, பழனிச்சாமி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சித்;திரவேல், முகமதுரசூல், செயற்பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர்கள் சிவசுப்பிரமணியன், விஜயகுமார், சுகாதார ஆய்வாளர்கள் அலாவுதீன், இளையராஜா, செல்வகுமார், கோபால் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொணடனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து